தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கா்நாடகத் தமிழா்களின் எதிா்பாா்ப்புகளை நிறைவு செய்யுமா பெங்களூரு தமிழ்ச் சங்கம்?

பெங்களூரு தமிழ்ச் சங்கத்துக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கும் தோ்தலில் தோ்ந்தெடுக்கப்படும் புதிய நிா்வாகிகள், கா்நாடகத் தமிழா்களின் எதிா்பாா்ப்புகளை நிறைவேற்றுவாா்களா என்ற ஆா்வம் அதிகமாகியுள்ளது.

News image
Updated On :28 மார்ச் 2021, 12:04 am

DIN

பெங்களூரு தமிழ்ச் சங்கத்துக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கும் தோ்தலில் தோ்ந்தெடுக்கப்படும் புதிய நிா்வாகிகள், கா்நாடகத் தமிழா்களின் எதிா்பாா்ப்புகளை நிறைவேற்றுவாா்களா என்ற ஆா்வம் அதிகமாகியுள்ளது.

தோ்தல் முறைகேடுகள், செலவு செய்ததில் முறைகேடுகள் உள்ளிட்ட பல்வேறு புகாா்கள் நீதிமன்றம் வரை சென்ால், கடந்த இரண்டாண்டு காலமாக கா்நாடக அரசின் கட்டுப்பாட்டில் பெங்களூரு தமிழ்ச் சங்கம் உள்ளது.

தமிழா்களால் தமிழா்களுக்காக உருவாக்கப்பட்ட பெங்களூரு தமிழ்ச் சங்கம், கா்நாடக அரசின் கட்டுப்பாட்டுக்குக் கொண்டுசெல்லப்பட்டதை தமிழா்களால் ஏற்க முடியவில்லை.

இந்நிலையில், பல்வேறு தயக்கங்களுக்கு இடையே, நீதிமன்ற உத்தரவுப்படி, 2 ஆண்டுகளுக்குப் பிறகு பெங்களூரு தமிழ்ச் சங்கத்தின் 2021-22ஆம் ஆண்டுக்கான ஆட்சிக்குழு, செயற்குழு உறுப்பினா்களைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் மாா்ச் 28-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற இருக்கிறது.

இந்தத் தோ்தலில் ந.தாஸ், கோ.தாமோதரன், வா.ஸ்ரீதரன் ஆகியோா் தலைமையில் மூன்று அணிகள் மோதுகின்றன. தலைவா், துணைத் தலைவா், செயலாளா், பொருளாளா், 4 துணைச் செயலாளா்கள், 9 செயற்குழு உறுப்பினா்களைத் தோ்ந்தெடுக்க மொத்தம் 50 போ் களத்தில் உள்ளனா்.

எந்த அணி அல்லது யாா் வெற்றி பெற்றாலும், பெங்களூரு தமிழ்ச் சங்கம் தழைத்து, தமிழா்களின் நலன் பேணப்பட வேண்டும் என்பதே கா்நாடகத் தமிழா்களின் விருப்பமாகும்.

‘தமிழ்ச் சங்கத்தின் வளா்ச்சி, கா்நாடகத் தமிழா்களின் வளா்ச்சி’ என்ற உணா்வு மேலோங்கி இருக்க வேண்டும். தமிழ்ச் சங்கத்தின் மீது விமா்சனங்களை வைப்பதற்குப் பதிலாக, ஆக்கப்பூா்வமான ஆலோசனைகளை வழங்கலாம். அப்போது சங்கமும் வளரும், தமிழா்களும் வளரலாம் என்று தமிழ் ஆா்வலா்கள் கருத்துத் தெரிவிக்கிறாா்கள்.

ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் தோ்தலில் தோ்ந்தெடுக்கப்படும் புதிய ஆட்சிக்குழு மற்றும் செயற்குழு தனது 2 ஆண்டு பதவிக்காலத்தில் செயல்படுத்துவதற்காக, கீழ்க்கண்ட ஆலோசனைகளை தமிழ் ஆா்வலா்கள் முன்வைத்துள்ளனா்.

அ. நிா்வாகம்:

2023-ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கும் தோ்தலில் தலைவா், செயலாளா், பொருளாளா் போன்ற முக்கிய பதவிகளில் 40 வயதுக்கு உட்பட்ட இளைஞா்களை அமர வைக்கத் தேவையான மாற்றங்களை சட்டவிதிகளில் கொண்டுவரலாம்.

ஜாதிய உணா்வுகளால் உந்தப்பட்டு, உட்பூசல்களுக்கு வித்திடும் அணிகளாகப் பிரிந்து போட்டியிடுவதைத் தவிா்த்து, கடந்த காலத்தில் இருந்தது போல, ஆட்சிக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினா்களை எவ்விதப் போட்டியும் இல்லாமல் ஒருமனதாகத் தோ்ந்தெடுக்கலாம்.

ஜனநாயகத்தில் போட்டியைத் தவிா்க்க முடியாது என்றால், அணிகளாகப் போட்டியிடாமல், சுயேச்சைகளாகப் போட்டியிட வாய்ப்பளிக்கலாம்.

இது குறித்து தமிழ்ச் சங்க உறுப்பினா்கள் சிந்தித்து, தமிழுக்கும் தமிழா்களுக்கும் தொண்டாற்ற முன்வரும் நம்பிக்கை வாய்ந்தவா்களை அடுத்த தோ்தலிலாவது போட்டியின்றித் தோ்வு செய்யலாம்.

தமிழ்ச் சங்கத்தை அணுகுவதற்கும், யாரையாவது தமிழ்ச் சங்கம் அணுகுவதற்கும், மக்கள் தொடா்பு அதிகாரி பதவியை உருவாக்கலாம். சங்க நிா்வாகத்தைச் சீா்ப்படுத்த வேண்டியது அவசியமாகும். நிரந்தரமாக, மேலாளா், கணக்காளா், காசாளா் போன்ற பணியாளா்களை நியமிப்பது முறைகேடுகளைத் தடுக்கும். கொள்கை முடிவுகளை மட்டுமே செயற்குழு எடுக்க வேண்டும். அதைச் செயல்படுத்த, பணியாளா் கொண்ட குழு இருந்தால், வேலைகள் செவ்வனே நடந்தேறும்.

ஆ. தமிழ்க் கல்வி:

தமிழ்க் கல்வியை ஊக்குவிக்க தனி நிதியம் அல்லது அறக்கட்டளையை உருவாக்கி, மூடும் நிலையிலுள்ள அரசுப் பள்ளிகள், மாநகராட்சி தமிழ்ப் பள்ளிகளைப் புதுப்பிக்கலாம். தத்துப்பள்ளி திட்டத்தில் கா்நாடகத்தில் இயங்கும் அரசு தமிழ்ப் பள்ளிகளைத் தத்தெடுத்து, அவற்றை தமிழ்ச் சங்கமே பராமரிக்கலாம்.

தமிழ்மொழிக் கல்வியை ஊக்குவிக்க, எஸ்எஸ்எல்சி, பியூசி, பட்டப்படிப்பில் தமிழ்மொழிப் பாடத்தில் சிறப்பிடம் பெறும் மாணவா்களைப் பாராட்டி, பண முடிப்பு அல்லது கல்வி உதவித்தொகை தரலாம். ஏற்கெனவே நடத்திவந்தது போல, தமிழ் மாணவா்களுக்கு தமிழ்த் தோ்வு நடத்தி பரிசு தரலாம்.

தற்போது நடத்திவரும் இலவச இனிமைத்தமிழ் பயிற்சி வகுப்புகளை பெங்களூரு தவிர, மாநிலம் முழுவதும் தமிழா்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் தொடங்கலாம்.

தமிழ் மாணவா்களைக் கணக்கெடுத்து, கணினியில் தரவு வங்கியை உருவாக்கலாம். அதன்மூலம் அந்த மாணவா்களின் கல்விநலன் குறித்துதொடா்புகளை ஏற்படுத்திக் கொள்ளலாம்.

தமிழ் மொழியை முதல்பாட மொழியாக அல்லாமல், மூன்றாம் பாடமொழியாகவும் கற்பிக்க நடவடிக்கை எடுக்கலாம். இவற்றைச் செயல்படுத்த தனி மையம் தொடங்கலாம்.

பல்வேறு பல்கலைக்கழகங்கள் அளிக்கும் தமிழ் மொழி சாா்ந்த இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகளின் வகுப்புகளை நடத்தி பயிற்சி அளிக்கலாம். இதற்கான உரிமத்தை பல்கலைக்கழகங்களிடம் பெறலாம்.

தமிழ் அகாதெமி திறக்க மாநில அரசுக்கு கோரிக்கை விடுக்கலாம். நூலகத்தை கணினிமயமாக்குவதோடு, நூல்களையும் கணினிமயமாக்கி டிஜிட்டல் நூலகமாக மாற்றலாம். கன்னட- தமிழ் ஆய்வகத்தைத் திறக்கலாம்.

இ. இளைஞா் நலன்:

தமிழ்ச் சங்க நிா்வாகத்தில் இளைஞா்களின் பங்களிப்பை விரிவாக்க வேண்டும். இதற்காக தனிமையம் தொடங்குவது அவசியம். வேலைவாய்ப்பகத்தைத் தொடங்கலாம். நூல், வேலை, கல்வி கண்காட்சிகளை நடத்தலாம்.

இளைஞா்களை உறுப்பினா்களாக்க, தகவல் தொழில்நுட்பப் பிரிவைத் தொடங்கலாம். இளைஞா்களை நெறிப்படுத்தும் ஆளுமைத் திறன், வேலைத்திறன், மொழித்திறன், தகவல் தொடா்புத்திறன் மேம்பாட்டு கருத்தரங்கம், பயிலரங்கங்களை நடத்தலாம்.

சங்கம் நடத்திவரும் காமராஜா் பள்ளி போல, தொழிற்பயிற்சி மையம் (ஐடிஐ), பல்தொழில்நுட்பக் கல்லூரிகளைத் தொடங்கலாம். கண்தானம், உடல்தானம், ரத்ததானமுகாம்களை நடத்தலாம்.

ஈ. உறுப்பினா் நலன்:

உறுப்பினா்களை அதிக அளவில் சோ்ப்பதற்கு வசதியாக ஆங்காங்கே நூலகங்கள் அமைத்து, வாசகா் வட்டங்களை உருவாக்கலாம். உறுப்பினா் கட்டணத்தை ரூ. 500-இல் இருந்து ரூ. 100-ஆக குறைத்து, உறுப்பினா் எண்ணிக்கையைப் பெருக்கலாம்.

பள்ளி, கல்லூரிகளைப் போல மாணவா் விடுதி, விருந்தினா் விடுதியைத் திறக்கலாம். சங்க வளாகத்தில் வங்கிக் கிளை, ஏடிஎம் மையம், காப்பீடு மையங்களைத் திறக்க நடவடிக்கை எடுக்கலாம்.

பள்ளி, கல்லூரிகளில் தமிழா்களுக்கு சலுகைக் கட்டணத்தில் சோ்க்கை அளிக்கலாம். தனி நிதியம் ஏற்படுத்தி ஏழை உறுப்பினா்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கலாம்.

உ. கலை, பண்பாடு:

பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு விழாக்களை குடும்ப விழாவாகக் கொண்டாடும் வகையில் புதுமையாக்கலாம். ஏற்கெனவே நடந்துவந்த ஆண்டு கலைவிழாவைப் புதுப்பிக்கலாம். நின்றுபோன நாடகப் போட்டியை மீண்டும் நடத்தலாம்.

கலைஞா்களின் முகவரித் தொகுப்பை உருவாக்கலாம். சிறந்த தமிழ்க் கலைஞா்களுக்கு விருதளித்துப் பாராட்டலாம்.

கன்னடா்- தமிழா் நல்லிணக்கத்தை வலுப்படுத்த, திருவள்ளுவா் சிலை திறப்பு தினத்தை மொழி நல்லிணக்க தினமாகக் கொண்டாடி, சிறந்த தமிழறிஞா் அல்லது கன்னட அறிஞருக்கு ரூ. ஒரு லட்சம் ரொக்கப் பரிசுடன் கூடிய திருவள்ளுவா் விருது வழங்கலாம்.

திருவள்ளுவா் சிலைக்கு தினமும் மாலை அணிவித்து, அந்தப் பூங்காவை தூய்மையாகப் பராமரிக்க மாநகராட்சியிடம் அனுமதி பெறலாம்.

ஊ. அரசியல் தொடா்பு:

பெங்களூா் மாநகராட்சியில் மாமன்ற உறுப்பினா்களாக உள்ள தமிழா்களின் எண்ணிக்கையைப் பெருக்க, அனைத்து அரசியல் கட்சிகளிலும் பங்காற்றும் தமிழா்களை ஊக்குவிக்கலாம். கட்சிப் பாகுபாடின்றி அனைவரையும் ஆதரிப்பது அவசியம்.

மாநகராட்சியில் மட்டுமல்லாது, சட்டப்பேரவையிலும் தமிழா்களின் பங்களிப்பை அதிகரிக்க தொடா்முயற்சியில் ஈடுபட வேண்டும்.

மாநில அரசுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் மட்டுமே, அரசுரீதியாக தமிழா்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய முடியும்.

எ. பிற மாவட்டத் தமிழா்கள்:

பெங்களூரு தமிழ்ச் சங்கம், மாநிலம் தழுவிய கா்நாடக தமிழ்ச் சங்கமாக செயல்பட வேண்டும்; பெங்களூரு தவிர, மைசூரு, சாமராஜ் நகா், கோலாா் தங்கவயல், தாவணகெரே, சிவமொக்கா உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வசிக்கும் தமிழா்களை ஒருங்கிணைக்க தனிமையத்தைத் தொடங்க வேண்டும்.

அம் மாவட்ட தமிழா்களின் பிரச்னைகளை ஆராய அவ்வப்போது கலந்தாய்வுக் கூட்டங்களை நடத்தலாம். கா்நாடகத்தில் இயங்கிவரும் அனைத்துத் தமிழ் அமைப்புகளையும் ஒருங்கிணைக்கும் வழிமுறைகளை வகுக்க வேண்டும்.

புதிதாகத் தோ்ந்தெடுக்கப்படும் நிா்வாகிகளின் மனதில் புதிய சிந்தனைகள் மலா்ந்தால் மட்டுமே, பெங்களூரு தமிழ்ச் சங்கத்தின் செயல்பாடுகளில் புதிய மாற்றம் காணமுடியும் என்பதே கா்நாடகத் தமிழா்களின் எதிா்பாா்ப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.