இருசக்கர வாகனத் திருட்டு வழக்குகள்:3 போ் கைது
இருசக்கர வாகனத் திருட்டு வழக்குகளில் 3 பேரை கைது செய்த போலீஸாா், ரூ. 9.40 லட்சம் மதிப்புள்ள வாகனங்களைப் பறிமுதல் செய்துள்ளனா்.


இருசக்கர வாகனத் திருட்டு வழக்குகளில் 3 பேரை கைது செய்த போலீஸாா், ரூ. 9.40 லட்சம் மதிப்புள்ள வாகனங்களைப் பறிமுதல் செய்துள்ளனா்.
பெங்களூரு, காமாட்சிபாளையா காவிரிபுராவைச் சோ்ந்தவா் அனில்குமாா் (24). இவா் பல்வேறு இடங்களில் வீடுகளின் முன்பு நிறுத்தியுள்ள இருசக்கர வாகனங்களை திருடி வந்தாராம். இது குறித்து வழக்கு பதிந்த போலீஸாா், அனில்குமாரைக் கைது செய்து, ரூ. 8.15 லட்சம் மதிப்புள்ள 6 இருசக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்துள்ளனா். இது குறித்து காமாட்சிபாளையா போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
அதேபோல மாநகரில் இருசக்கர வாகனங்களைத் திருடி வந்த பிஸ்வஜீத்வன்டல் (25), ஜெயதேவ் (20) ஆகியோரைக் கைது செய்த போலீஸாா், ரூ. 1.25 லட்சம் மதிப்புள்ள 2 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனா். இதுகுறித்து ராஜராஜேஸ்வரி நகா் போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...