"ஆளுநர் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி பாஜக அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களில் பிரச்னைகளை உண்டாக்குகிறது. மேற்கு வங்கம் உள்பட பல்வேறு மாநிலங்களில் ஆளுநர்கள் பாஜக நிர்வாகிகள் போல் செயல்படுகின்றனர். சிபிஐ, அமலாக்கத் துறை உள்ளிட்ட அரசு நிறுவனங்களை பாஜக அல்லாத மற்ற கட்சி நிர்வாகிகள் மற்றும் தலைவர்கள் மீது பழிவாங்கும் செயலாக தவறாகப் பயன்படுத்துகிறது. பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவதை மோடி அரசு திட்டமிட்டே நிறுத்தி வைக்கிறது. நாட்டின் சொத்துகளை தனியார்மயமாக்குவது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல். காரணம், அவை இந்திய மக்களுக்கு சொந்தமானது. மத்திய, மாநில அரசுகளின் உறவு சுதந்திர இந்தியா வரலாற்றில் இந்த அளவுக்கு மோசமானதாக இருந்ததில்லை."