எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

மம்தாவுக்கு சரத் பவார் வாழ்த்து!

மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகித்து வரும் நிலையில் மம்தா பானர்ஜிக்கு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :2 மே 2021, 8:59 am

DIN


மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகித்து வரும் நிலையில் மம்தா பானர்ஜிக்கு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்திலுள்ள 292 தொகுதிகளில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி 202 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. அங்கு ஆட்சி அமைக்க 147 இடங்களே தேவை என்ற நிலையில், கூடுதலாக 50-க்கும் மேற்பட்ட இடங்களில் திரிணமூல் முன்னிலை வகித்து வருகிறது.

இந்த நிலையில் சரத் பவார் சுட்டுரைப் பக்கத்தில் மம்தா பானர்ஜிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பவாரின் சுட்டுரைப் பதிவு:

"பிரம்மாண்ட வெற்றிக்கு வாழ்த்துகள். தொடர்ந்து மக்கள் நலனுக்காக இணைந்து பணியாற்றுவோம். பெருந்தொற்றையும் கூட்டாக எதிர்கொள்வோம்."

வாக்கு விகிதத்தின் அடிப்படையில் திரிணமூல் 48.5 சதவிகித வாக்குகளைப் பெற்றுள்ளது. பாஜக 37.4 சதவிகித வாக்குகளைப் பெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.