இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

ஆப்கன் எல்லையில் 4 பாகிஸ்தான் வீரர்கள் சுட்டுக் கொலை

பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லை அருகே நடந்த பயங்கரவாத தாக்குதலில் 4 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 6 பேர் காயமடைந்தனர். 

News image

கோப்புப்படம்

Updated On :6 மே 2021, 10:46 am

ANI

பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லை அருகே நடந்த பயங்கரவாத தாக்குதலில் 4 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 6 பேர் காயமடைந்தனர். 

பாகிஸ்தானின் இன்டர்-சர்வீசஸ் பப்ளிக் ரிலேஷன்ஸ்(ஐ.எஸ்.பி.ஆர்) வெளியிட்டுள்ள அறிக்கையில், 

ஜாப் மாவட்டத்தில் துணை ராணுவப் படையினர் மாவட்ட எல்லையில் எல்லை வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது இந்த தாக்குதல் நடந்ததாகத் தெரிவித்துள்ளது.

தாக்குதலுக்குப் பின், காயமடைந்த வீரர்கள் தலைநகர் குவெட்டாவில் உள்ள ஒருங்கிணைந்த ராணுவ மருத்துவமனைக்கு  அனுப்பப்பட்டனர்.

ஐ.எஸ்.பி.ஆர் பயங்கரவாத நடவடிக்கைகள் மற்றும் ஆப்கானிஸ்தானிலிருந்து கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளை நிறுத்த இந்த வேலி அமைக்கப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.