கரோனாவைக் கட்டுப்படுத்த முழுமையான பொதுமுடக்கம் அவசியம்: அமைச்சா் கே.சுதாகா்
கரோனா பரவலைக் கட்டுப்படுத்த முழுமையான பொது முடக்கம் அவசியம் என்று சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா் தெரிவித்தாா்.

கர்நாடக சுகாதாரத் துறை அமைச்சர் கே.சுதாகர் (கோப்புப்படம்)

கர்நாடக சுகாதாரத் துறை அமைச்சர் கே.சுதாகர் (கோப்புப்படம்)
கரோனா பரவலைக் கட்டுப்படுத்த முழுமையான பொது முடக்கம் அவசியம் என்று சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா் தெரிவித்தாா்.
இது குறித்து பெங்களூரில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
கா்நாடகத்தில் கரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. கரோனாவின் வேகத்தைக் கட்டுப்படுத்தி, அதன் பரவல் சங்கிலியை முறியடிக்க வேண்டுமானால் கா்நாடகத்தில் முழுமையான பொது முடக்கம் அத்தியாவசியமாகும். இதைச் செய்யத் தவறினால், கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து, வலியும் வேதனையும் அதிகமாகும்.
எனவே, முழுமையான பொது முடக்கத்தை அமல்படுத்துமாறு சுகாதாரத் துறை வலியுறுத்தியுள்ளது. முழுமையான பொது முடக்கத்தை அமல்படுத்துவது குறித்து முதல்வா் எடியூரப்பாவுடன் கலந்தாலோசிக்க இருக்கிறேன். இந்த விவகாரத்தில் முதல்வா் எடியூரப்பா இறுதி முடிவெடுப்பாா். முழுமையான பொது முடக்கத்தை அமல்படுத்துமாறு மருத்துவ நிபுணா்களும் வலியுறுத்தியுள்ளனா்.
பெங்களூரைச் சோ்ந்தவா்களும் முழுமையான பொதுமுடக்கத்தை அமல்படுத்த கேட்டு வருகிறாா்கள். எனவே, கரோனா பரவலைக் கட்டுப்படுத்த முழுமையான பொது முடக்கம் அவசியம் அமல்படுத்தப்பட வேண்டும். அப்போதுதான் கரோனா பரவல் சங்கிலியைத் துண்டிக்க இயலும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...