சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடா பகுதியில் நக்சல் ஒருவர் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
தண்டேவாடா பகுதியில் மஸ்தல்னர் கிராமத்தில் வெள்ளிக்கிழமை காலை நக்சல் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் பல்லவ் கூறுகையில், இன்று காலை 7: 30 மணியளவில் நக்சலைட் ஒருவர் கொல்லப்பட்டார். அவரது உடல் மீட்கப்பட்டுள்ளது. மேலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு ஆயுதங்கள், இரண்டு கிலோ வெடிமருந்து, கம்பிகள் உள்ளிட்ட பிற பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன என்றார்.