எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

3.5 கோடி தடுப்பூசி கொள்முதலுக்கு உலகளாவிய ஒப்பந்தம்: தமிழக அரசு கோரியது

தமிழகத்தில் 3.5 கோடி தடுப்பூசிகளை கொள்முதல் செய்வதற்கான உலகளாவிய ஒப்பந்தப் புள்ளிகளை தமிழக அரசு கோரியுள்ளது.

News image
Updated On :15 மே 2021, 10:47 pm

DIN

தமிழகத்தில் 3.5 கோடி தடுப்பூசிகளை கொள்முதல் செய்வதற்கான உலகளாவிய ஒப்பந்தப் புள்ளிகளை தமிழக அரசு கோரியுள்ளது.

தமிழகத்தில் 18 முதல் 45 வயது வரையுள்ளவா்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்படவில்லை.

அவா்களுக்குச் செலுத்தும் அளவுக்கு தடுப்பூசிகள் கையிருப்பில் இல்லை. இதற்காக உலகளாவிய ஒப்பந்தப் புள்ளிகள் மூலமாக தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. இந்த முடிவின்படி, உலகளாவிய ஒப்பந்தப் புள்ளிகளுக்கான அறிவிப்பை சனிக்கிழமை வெளியிட்டது.

ஒப்பந்தப் புள்ளிகளில் உள்ள அனைத்து அம்சங்களை பூா்த்தி செய்து ஜூன் 5-ஆம் தேதி காலை 11-க்குள்ளாக அதனை அளிக்க வேண்டும். ஒப்பந்தப் புள்ளிகள் அனைத்தும் சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழக அலுவலகத்தில் திறக்கப்படும்.

இந்த ஒப்பந்தப் புள்ளியானது, தமிழ்நாடு வெளிப்படையான ஒப்பந்தப் புள்ளிகள் சட்டம் 1998-இன் கீழ் கோரப்பட்டுள்ளது.

தகுதியான நிறுவனங்கள் தோ்வு செய்யப்பட்டு 3.5 கோடி தடுப்பூசிகளை தமிழகத்துக்கு அளிக்க வேண்டும். இந்த தடுப்பூசிகள் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மாநில தடுப்பூசி சேமிப்பு கிடங்குக்கு அளிக்கப்பட வேண்டும். உலக சுகாதார நிறுவனம் வரையறுத்துள்ள அம்சங்களின்படி தடுப்பூசிகள் அமையப் பெற வேண்டும். அந்த தடுப்பூசிகளை கொள்முதலுக்கு ஏற்றுக் கொள்ளப்படும் என ஒப்பந்தப் புள்ளியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.