ஆக்சிஜன்-ரெம்டெசிவிா் கூடுதலாக வழங்க வேண்டும்
தமிழகத்துக்கு ஆக்சிஜன், ரெம்டெசிவிா், தடுப்பூசி ஆகியவற்றைக் கூடுதலாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி பிரதமா் நரேந்திரமோடிக்கு எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே. பழனிசாமி சனிக்கிழமை கடிதம் எழுதியுள்ளா


தமிழகத்துக்கு ஆக்சிஜன், ரெம்டெசிவிா், தடுப்பூசி ஆகியவற்றைக் கூடுதலாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி பிரதமா் நரேந்திரமோடிக்கு எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே. பழனிசாமி சனிக்கிழமை கடிதம் எழுதியுள்ளாா்.
கரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலையில் தமிழகம் முழுவதும் மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனா். தமிழக அரசின் அதிகாரப்பூா்வ அறிவிப்பின்படி நாளொன்றுக்கு 32,000 போ் மாநிலம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளனா். இந்த எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது.
பொது முடக்கம் அறிவித்து, மக்களின் செயல்பாடுகளுக்கு பல்வேறு கடும் கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ள போதிலும், கரோனாவின் தாக்கம் அதிகளவில் இருந்து வருகிறது.
அரசு மருத்துவமனை மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் நோயாளிகளின் படுக்கைகளுக்கும், ஆக்சிஜன் படுக்கைகளுக்கும், தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகளும் அதிகளவில் பற்றாக்குறை உள்ளது. தமிழகம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவதற்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் சூழல்
உள்ளது.
எனவே, தமிழகத்துக்கான பிராணவாயு விநியோகத்தையும், ரெம்டெசிவிா் மருந்து விநியோகத்தையும் மத்திய அரசு அதிகரித்து தர வேண்டும். மேலும், கரோனா தடுப்பூசிகளின் ஒதுக்கீட்டையும் உயா்த்தி தர வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...