ஆந்திரத்தில் ஒரேநாளில் 24,171 பேருக்கு கரோனா

ஆந்திரத்தில் ஒரேநாளில் 24,171 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆந்திரத்தில் ஒரேநாளில் 24,171 பேருக்கு கரோனா

ஆந்திரத்தில் ஒரேநாளில் 24,171 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் 94,550 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. அவற்றில் புதிதாக 24,171 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 14,32,596ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் கரோனாவுக்கு இன்று மேலும் 101 பேர் பலியானார்கள். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 9,372ஆக உயர்ந்துள்ளது. 

கரோனாவிலிருந்து இன்று 21,101 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போதைய நிலவரப்படி 2,10,431 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.   
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com