மேற்கு வங்க முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யாவிற்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
மேற்கு வங்கத்தின் முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா (77) மற்றும் அவரது மனைவி மிரா பட்டாச்சார்யா ஆகியோரின் மாதிரிகள் கரோனா பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டன.
இதில் இருவருக்கும் கரோனா தொற்று உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மருத்துவர் அறிவுரையின்படி புத்ததேவ் பட்டாச்சார்யா வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.
அவரது மனைவிக்கு மருத்துவமனையில் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருகிறார்.