'கருப்புப் பூஞ்சை' நோயை தொற்றுநோயாக அறிவித்தது ராஜஸ்தான் அரசு!
'கருப்பு பூஞ்சை' நோயை ராஜஸ்தான் அரசு ஒரு தொற்றுநோயாக அறிவித்துள்ளது.

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்
'கருப்புப் பூஞ்சை' நோயை ராஜஸ்தான் அரசு ஒரு தொற்றுநோயாக அறிவித்துள்ளது.
‘மியூகோமைகோசிஸ்’ என்னும் கருப்புப் பூஞ்சை மிகவும் அபாயகரமான, அரியவகை பூஞ்சையாகும். இந்த பூஞ்சை தாக்குவதால் தலைவலி, காய்ச்சல், கண்களில் வலி, மூக்கடைப்பு, பார்வைக் குறைபாடு போன்ற அறிகுறிகள் உண்டாகும். பெரும்பாலும் கரோனாவில் இருந்து மீண்டவா்களையே இந்த கருப்புப் பூஞ்சை தாக்கி வருகிறது.
ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இந்த கருப்புப் பூஞ்சை தாக்குதல் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், ராஜஸ்தானில் கருப்புப் பூஞ்சை பாதிப்பு அதிகரித்து வருவதால் இந்த நோயை மாநிலத்தில் ஒரு தொற்றுநோயாக மாநில அரசு அறிவித்துள்ளது. 'ராஜஸ்தான் தொற்று நோய்கள் சட்டம், 2020' இன் கீழ் இதனை அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...