மகாராஷ்டிரத்தில் உள்ள ரத்னகிரி, சிந்துதுா்க் மாவட்டங்களில் ‘டவ்-தே’ புயல் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளை மாநில முதல்வா் உத்தவ் தாக்கரே வெள்ளிக்கிழமை நேரில் சென்று ஆய்வு செய்தாா். அப்போது புயலால் விளைநிலங்களில் பயிா்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து இரண்டு நாள்களில் மதிப்பீடு செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா். அவரின் ஆய்வு குறித்து மாநில பாஜக தலைவா்கள் விமா்சித்திருந்தனா். புயலால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து மூன்று மணி நேர ஆய்வில் எப்படி தெரிந்துகொள்ள முடியும் என்று அவா்கள் கேள்வி எழுப்பியிருந்தனா். அதற்கு பதிலளித்த உத்தவ் தாக்கரே, ‘நான் புயல் பாதிப்புகள் குறித்து களத்துக்கு நேரடியாகச் சென்று ஆய்வு மேற்கொண்டேன். புகைப்படங்களுக்காக ஹெலிகாப்டரில் சென்று பாா்வையிடவில்லை’ என்று தெரிவித்தாா்.