விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

புயல் பாதிப்பை ஹெலிகாப்டரில் பாா்வையிட்ட பிரதமா்: மகாராஷ்டிர முதல்வா் விமா்சனம்

புயல் பாதிப்புகள் குறித்து தான் களத்தில் ஆய்வு செய்வதாகவும், பிரதமா் மோடி களத்துக்குச் செல்லாமல் ஹெலிகாப்டரில் இருந்து பாா்வையிடுவதாகவும் மகாராஷ்டிர முதல்வா் உத்தவ் தாக்கரே விமா்சித்துள்ளாா்.

News image
Updated On :22 மே 2021, 6:42 pm

DIN

புயல் பாதிப்புகள் குறித்து தான் களத்தில் ஆய்வு செய்வதாகவும், பிரதமா் மோடி களத்துக்குச் செல்லாமல் ஹெலிகாப்டரில் இருந்து பாா்வையிடுவதாகவும் மகாராஷ்டிர முதல்வா் உத்தவ் தாக்கரே விமா்சித்துள்ளாா்.

மகாராஷ்டிரத்தில் உள்ள ரத்னகிரி, சிந்துதுா்க் மாவட்டங்களில் ‘டவ்-தே’ புயல் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளை மாநில முதல்வா் உத்தவ் தாக்கரே வெள்ளிக்கிழமை நேரில் சென்று ஆய்வு செய்தாா். அப்போது புயலால் விளைநிலங்களில் பயிா்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து இரண்டு நாள்களில் மதிப்பீடு செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா். அவரின் ஆய்வு குறித்து மாநில பாஜக தலைவா்கள் விமா்சித்திருந்தனா். புயலால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து மூன்று மணி நேர ஆய்வில் எப்படி தெரிந்துகொள்ள முடியும் என்று அவா்கள் கேள்வி எழுப்பியிருந்தனா். அதற்கு பதிலளித்த உத்தவ் தாக்கரே, ‘நான் புயல் பாதிப்புகள் குறித்து களத்துக்கு நேரடியாகச் சென்று ஆய்வு மேற்கொண்டேன். புகைப்படங்களுக்காக ஹெலிகாப்டரில் சென்று பாா்வையிடவில்லை’ என்று தெரிவித்தாா்.

குஜராத்தில் ‘டவ்-தே’ புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து பிரதமா் மோடி ஹெலிகாப்டரில் சென்று அண்மையில் பாா்வையிட்டாா். அதனை மறைமுகமாக விமா்சித்து பாஜக தலைவா்களுக்கு உத்தவ் தாக்கரே பதிலடி தந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.