ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

கரோனா உறுதி செய்யப்படும் விகிதம் 9.54% ஆகக் குறைவு

நாட்டில் கரோனா பரவலின் தீவிரம் குறைந்து வருகிறது. தொடர்ந்து 12வது நாளாக புதிய பாதிப்பை விட குணமடைவோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதே வேளையில் கரோனா உறுதி செய்யப்படுவோரின் விகிதம் 9.54 சதவீதமாக குறைந்து

News image
கரோனா உறுதி செய்யப்படும் விகிதம் 9.54% ஆகக் குறைவு
Updated On :25 மே 2021, 7:42 am

DIN

புது தில்லி: நாட்டில் கரோனா பரவலின் தீவிரம் குறைந்து வருகிறது. தொடர்ந்து 12வது நாளாக புதிய பாதிப்பை விட குணமடைவோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதே வேளையில் கரோனா உறுதி செய்யப்படுவோரின் விகிதம் 9.54 சதவீதமாக குறைந்துள்ளது.

நாட்டில் கரோனா பாதிப்பு குறித்து மத்திய சுகாதாரத் துறை கூறியிருப்பதாவது, மே 10-ஆம் தேதி முதல் நாட்டில் கரோனா பாதித்து சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கையும் மெல்ல குறைந்து வருகிறது.

கரோனா பாதிப்பு உறுதி செய்யப்படுபவர்களின் எண்ணிக்கையை விட குணமடைவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகமாக உள்ளது. அந்த வகையில் நேற்று 3,26,850 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். இதனால் ஒட்டுமொத்தமாக குணமடைந்தோர் எண்ணிக்கை 2.40 கோடியாக உள்ளது. 

கரோனா பரிசோதனை செய்து கொள்பவர்களில் தொற்று உறுதி செய்யப்படுவோர் விகிதம் 9.54 சதவீதமாகக் குறைந்துள்ளது. சுமார் 40 நாள்களுக்குப் பின் நாட்டில் ஒரு நாள் கரோனா பாதிப்பு 2 லட்சத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.