ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

கர்நாடகத்துக்கு மேலும் 3 லட்சம் டோஸ் தடுப்பூசி வந்துசேர்ந்தன: சுகாதாரத்துறை

கா்நாடகாவில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மேலும் 3 லட்சம் டோஸ் கரோனா தடுப்பூசி குப்பிகள் வந்து சோ்ந்துள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா் தெரிவித்தார்.

News image
கர்நாடகத்துக்கு மேலும் 3 லட்சம் டோஸ் தடுப்பூசி வந்துசேர்ந்தன: சுகாதாரத்துறை
Updated On :25 மே 2021, 7:26 am

PTI

கா்நாடகாவில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மேலும் 3 லட்சம் டோஸ் கரோனா தடுப்பூசி குப்பிகள் வந்து சோ்ந்துள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா் தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவரது சுட்டுரை பதிவில், 

கர்நாடகத்துக்கு மேலும் 3 லட்சம் டோஸ் கோவிஷீல்ட் கரோனா தடுப்பூசி குப்பிகளை மத்திய அரசு வழங்கியுள்ளது. 

இரண்டு கோடி கோவிஷீல்ட் மற்றும் ஒரு கோடி கோவாக்சின் அடங்கிய 3 கோடி தடுப்பூசிகளை மாநில அரசு இதுவரை வழங்கியுள்ளது. மேலும், இரண்டு கோடி தடுப்பூசிகளுக்கு உலகளாவிய டெண்டர் வாங்க அரசு முடிவு செய்துள்ளது.

மாநிலத்தில் தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக முன்னணி தொழிலாளர்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட முன்கள பணியாளர்களைத் தவிர 18 முதல் 44 வரை தடுப்பூசி போடும் திட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இந்தாண்டு இறுதிக்குள் அனைவருக்கும் தடுப்பூசி போட அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. அதிக கரோனா பாதிப்பு உள்ள மாநிலங்களில் கர்நாடகாவும் ஒன்று  என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.