மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக புதன்கிழமை (மே 26) கருப்பு தினமாக அணுசரிக்க சம்யுக்த கிஸான் மோா்ச்சா அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. இந்தப் போராட்டத்துக்கு பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது சுட்டுரைப் பக்கத்தில் மாயாவதி கூறுகையில், கரோனா பெருந்தொற்று காலத்திலும் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் கடுமையாக போராடி வருகிறார்கள். அவர்களது மே 26 போராட்டத்துக்கு பகுஜன் சமாஜ் தனது முழு ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
வேளாண் விளைபொருள்கள் வியாபார மற்றும் வா்த்தக சட்டம், வேளாண் விளைபொருள்கள் விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் சட்டம், அத்தியாவசிய பொருள்கள் திருத்தச் சட்டம் ஆகிய 3 சட்டங்களை மத்திய அரச கடந்த ஆண்டு இயற்றியது. இந்த சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி பஞ்சாப், ஹரியாணா, மேற்கு உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் தில்லி எல்லையில் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
அவா்களின் போராட்டம் தொடங்கி மே 26-ஆம் தேதியுடன் 6 மாதங்கள் நிறைவடைய உள்ளது. அதனையொட்டி, அன்றைய தினத்தை கருப்பு தினமாக கடைப்பிடிக்க, மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் மக்கள் தங்கள் வீடுகள், வாகனங்கள், கடைகளில் கருப்புக் கொடி கட்டி எதிா்ப்பை பதிவு செய்யுமாறு விவசாய சங்கத்தினா் அழைப்பு விடுத்துள்ளனா். இதற்கு எதிா்க் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

2030-31க்குள் 8,000 சேவை மையங்களை அமைக்க மாருதி சுசுகி இந்தியா இலக்கு!

மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு!

எடப்பாடி பழனிசாமியின் 4 ஆண்டுகால ஆட்சியை மட்டும் விமர்சித்த முதல்வர் ஸ்டாலின்!

கேரளம்: அரசு மருத்துவமனையில் மருத்துவரைத் தாக்கிய 4 பெண்கள் கைது
வீடியோக்கள்

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை

Podcast | பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்கள் வருமா வராதா? | News & Views | E-21 |
தினமணி செய்திச் சேவை

பஞ்சாபை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெறுமா சிஎஸ்கே?
தினமணி செய்திச் சேவை

எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து பேச்சைத் துவங்கிய விஜய்!
இணையதளச் செய்திப் பிரிவு


