புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

தில்லியில் கடந்த 2 நாள்களில் 100 பேருக்கு கருப்புப் பூஞ்சை: சுகாதாரத் துறை

தில்லியில் கடந்த 2 நாள்களில் 100 பேருக்கு கருப்புப் பூஞ்சை தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார்.

News image
சத்யேந்தர் ஜெயின் (கோப்புப்படம்)
Updated On :26 மே 2021, 7:13 am

DIN

தில்லியில் கடந்த 2 நாள்களில் 100 பேருக்கு கருப்புப் பூஞ்சை தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, தில்லியில் கருப்புப் பூஞ்சையால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கடந்த 23-ம் தேதி 200-க்கும் மேற்பட்டோருக்கு கருப்புப் பூஞ்சை தொற்று கண்டறியப்பட்டது. இதுவரை 600க்கும் அதிகமானோர் கருப்புப் பூஞ்சையால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

கடந்த 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில், தில்லியைச் சேர்ந்தவர்கள் மற்றும் தில்லிக்கு வெளியில் இருந்து வந்தவர்கள் என 100 பேருக்கு கருப்புப் பூஞ்சை தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்று கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.