கேரளத்தின் விஜின்ஜாம் கடற்கரையில் படகுகள் கவிழ்ந்ததில் மீனவர்கள் சிலர் காணாமல் போனதாகவும், ஒருவர் பலியானதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
செவ்வாய்க்கிழமை இரவு பலத்த காற்று காரணமாக படகுகள் கவிழ்ந்ததில், இருவர் மாயமாகியுள்ளனர். இருவரைக் கண்டுபிடிப்பதற்கான மீட்பு நடவடிக்கை நடந்து வருகிறது.
கடலோர குக்கிராமமான பூந்துராவைச் சேர்ந்த 55 வயதான டேவிட்சனின் சடலம் இன்று காலை ஆதிமலத்துராவிலிருந்து மீட்கப்பட்டதாகக் கடலோர காவல்துறையினர் தெரிவித்தனர்.
கடலில் மாயமானவர்கள் பூந்துரா மற்றும் கோட்டாபுரத்தை பூர்வீகமாகக் கொண்ட ஜோசப் மற்றும் ஷபரியார் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இறந்தவர் உள்பட 17 பேரை ஏற்றிச் சென்ற நான்கு படகுகள் கவிழ்ந்துள்ளன. இந்தியக் கடலோர காவல்படை (ஐ.சி.ஜி) இதுவரை மொத்தம் எட்டு பேரை மீட்டுள்ளது. மீட்டுப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
இதற்கிடையில், திருவனந்தபுரம், கொல்லம் மற்றும் பதனம்திட்டாவின் பல பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

2030-31க்குள் 8,000 சேவை மையங்களை அமைக்க மாருதி சுசுகி இந்தியா இலக்கு!

மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு!

எடப்பாடி பழனிசாமியின் 4 ஆண்டுகால ஆட்சியை மட்டும் விமர்சித்த முதல்வர் ஸ்டாலின்!

கேரளம்: அரசு மருத்துவமனையில் மருத்துவரைத் தாக்கிய 4 பெண்கள் கைது
வீடியோக்கள்

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை

Podcast | பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்கள் வருமா வராதா? | News & Views | E-21 |
தினமணி செய்திச் சேவை

பஞ்சாபை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெறுமா சிஎஸ்கே?
தினமணி செய்திச் சேவை

எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து பேச்சைத் துவங்கிய விஜய்!
இணையதளச் செய்திப் பிரிவு


