சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு! போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தேர்தல் அதிகாரியிடம் விஜய் மனு!!அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது! முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்பு
/

கரோனா 2-ம் அலையிலிருந்து மீண்டு வருகிறது மும்பையின் தாராவி

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள மிகப்பெரிய குடிசைப் பகுதியான தாராவியில் கடந்த 24 மணி நேரத்தில் வெறும் 3 பேருக்கு மட்டுமே கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image

கரோனா 2-ம் அலையிலிருந்து மீண்டு வருகிறது மும்பையின் தாராவி

Updated On :27 மே 2021, 6:24 am

ANI


மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள மிகப்பெரிய குடிசைப் பகுதியான தாராவியில் கடந்த 24 மணி நேரத்தில் வெறும் 3 பேருக்கு மட்டுமே கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் கரோனா 2-ம் அலையிலிருந்து மும்பையின் தாராவி முழுமையாக மீண்டு வருகிறது என்று கூறப்படுகிறது.

கடந்த பிப்ரவரி மாதம் இந்தியாவில் கரோனா 2ம் அலை தீவிரமடையத் தொடங்கியது முதல் தாராவியில் பதிவாகும் மிகக் குறைந்த கரோனா பாதிப்பு இதுவாகும்.

ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான தாராவியி சுமார் 8 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். கரோனா முதல் அலையின் போது தாராவியில் கரோனா வெகுச் சிறப்பாக கட்டுப்படுத்தப்பட்டது, உலக நாடுகளிடையே பெரும் கவனத்தை ஈர்த்தது. இதுவரை அங்கு 6,798 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. தற்போது 62 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.