தில்லியில் பயன்படுத்திய கையுறைகளை சேகரித்து அதனை புதிய பாக்கெட்டுகளில் அடைத்து மீண்டும் விற்பனை செய்து வந்த மூவரை காவல் துறையினர் கைது செய்தனர்.
தென்மேற்கு தில்லியின் தாப்ரி பகுதியில் உள்ள கிடங்கு ஒன்றில் பயன்படுத்தப்பட்ட மருத்துவ கையுறைகள் அதிக அளவில் பதுக்கப்பட்டிருப்பதாக காவல் துறைக்கு தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் சோதனை மேற்கொண்ட காவல் துறையினர் 848 கிலோ பயன்படுத்திய மருத்துவக் கையுறைகளை பறிமுதல் செய்தனர்.
மேலும், கிடங்கில் இருந்த மூவரையும் அதிகாரிகள் கைது செய்தனர். அவை மொத்தமும் பயன்படுத்திய கையுறைகள் என்பதும், அவற்றை சேகரித்து தண்ணீரில் கழுவி பாக்கெட்டுகளில் அடைத்து மீண்டும் விற்பனை செய்ததும் காவல் துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், பயன்படுத்திய கையுறைகளை பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்து வந்தது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

த.வெ.க.வை ஆதரித்துக் கையெழுத்திட்ட அமமுக எம்எல்ஏ! டிடிவி சொல்வது உண்மையா?

இந்திய கடற்படையின் புதிய தளபதியாக கிருஷ்ணா சுவாமிநாதன் நியமனம்!

நாட்டின் முப்படைத் தலைமைத் தளபதியாக என்.எஸ். ராஜா சுப்ரமணி நியமனம்!

ஐடிஐ, டிப்ளமோ, சிஏ முடித்தவர்களுக்கு வேலை: எங்கு?
விடியோக்கள்

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு
