சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

பயன்படுத்திய கையுறைகள் மீண்டும் விற்பனை: தில்லியில் மூவர் கைது

தில்லியில் பயன்படுத்திய கையுறைகளை சேகரித்து அதனை புதிய பாக்கெட்டுகளில் அடைத்து மீண்டும் விற்பனை செய்து வந்த மூவரை காவல் துறையினர் கைது செய்தனர். 

News image
Updated On :27 மே 2021, 10:36 am

DIN


தில்லியில் பயன்படுத்திய கையுறைகளை சேகரித்து அதனை புதிய பாக்கெட்டுகளில் அடைத்து மீண்டும் விற்பனை செய்து வந்த மூவரை காவல் துறையினர் கைது செய்தனர். 

தென்மேற்கு தில்லியின் தாப்ரி பகுதியில் உள்ள கிடங்கு ஒன்றில் பயன்படுத்தப்பட்ட மருத்துவ கையுறைகள் அதிக அளவில் பதுக்கப்பட்டிருப்பதாக காவல் துறைக்கு தகவல் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் சோதனை மேற்கொண்ட காவல் துறையினர் 848 கிலோ பயன்படுத்திய மருத்துவக் கையுறைகளை பறிமுதல் செய்தனர். 

மேலும், கிடங்கில் இருந்த மூவரையும் அதிகாரிகள் கைது செய்தனர். அவை மொத்தமும் பயன்படுத்திய கையுறைகள் என்பதும், அவற்றை சேகரித்து தண்ணீரில் கழுவி பாக்கெட்டுகளில் அடைத்து மீண்டும் விற்பனை செய்ததும் காவல் துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், பயன்படுத்திய கையுறைகளை பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்து வந்தது அப்பகுதியில்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.