மே 7-ல் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்! காங்கிரஸிடம் ஆதரவு கேட்டார் விஜய் : கே.சி. வேணுகோபால்ஆட்சி அமைக்க எடப்பாடியுடன் தவெக பேச்சு: லீமா ரோஸ்தவெகவுக்கு அதிமுக ஆதரவு அளிக்காது: ஓ.எஸ். மணியன் பேட்டிவெற்றி, தோல்விகளைக் கடந்தது கொளத்தூர் உறவு : மு.க. ஸ்டாலின்மாற்றத்தை நிகழ்த்திக் காட்டிய மக்களுக்கு நன்றி : விஜய்நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜி
/

கரோனா பாதிக்காத தாய்க்கு தொற்று பாதித்த குழந்தை: பிறந்ததும் எடுத்த சோதனையில் அதிர்ச்சி

கரோனா  பரிசோதனையில் தொற்று பாதிப்பு இல்லை என்று தாய்க்கு முடிவு வந்த நிலையில், அவருக்குப் பிறந்த குழந்தை பிறக்கும் போதே தொற்று பாதிப்புடன் இருந்தது சோதனையில் தெரிய வந்துள்ளது.

News image

கரோனா பாதிக்காத தாய்க்கு தொற்று பாதித்த குழந்தை: பிறந்ததும் எடுத்த சோதனையில் அதிர்ச்சி

Updated On :28 மே 2021, 2:40 pm IST


வாராணசி: கரோனா  பரிசோதனையில் தொற்று பாதிப்பு இல்லை என்று தாய்க்கு முடிவு வந்த நிலையில், அவருக்குப் பிறந்த குழந்தை பிறக்கும் போதே தொற்று பாதிப்புடன் இருந்தது சோதனையில் தெரிய வந்துள்ளது.

வாராணசியில் உள்ள எஸ்எஸ்எல் மருத்துவமனையில் மே 24-ஆம் தேதி பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டு அதில் தொற்று இல்லை என்று முடிவு வெளியான நிலையில், மே 25-ஆம் தேதி அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.

குழந்தை பிறந்ததுமே கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், குழந்தைக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. கரோனா பாதிக்காத கர்ப்பிணிக்கு, கரோனா பாதித்த குழந்தை பிறந்திருப்பது இந்த பரிசோதனை மூலம் தெரிய வந்துள்ளது.

குழந்தையும், தாயும் நலமாக இருக்கிறார்கள். ஒரு சில நாள்களுக்குப் பிறகு இருவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.