‘லட்சத்தீவுகள் நிர்வாகியை திரும்பப்பெற வேண்டும்’: சீதாராம் யெச்சூரி

மத்திய அரசு உடனடியாக லட்சத்தீவுகள் நிர்வாகியைத் திரும்பப் பெற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி வலியுறுத்தியுள்ளார்.
சீத்தாராம் யெச்சூரி
சீத்தாராம் யெச்சூரி
Published on
Updated on
1 min read

மத்திய அரசு உடனடியாக லட்சத்தீவுகள் நிர்வாகியைத் திரும்பப் பெற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி வலியுறுத்தியுள்ளார்.

லட்சத்தீவுகளின் நிர்வாகி பிரஃபுல் கோடா படேலின் பல்வேறு நடவடிக்கைகள் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளன. அவரின்  புதிய உத்தரவுகள் லட்சத்தீவுகளில் வாழும் பழங்குடிகளின் வாழ்வாதாரத்தை பாதிப்பதாகக் கூறி எதிர்க்கட்சிகள் விமர்சனம் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி தனது சுட்டுரைப் பக்கத்தில், “லட்சத்தீவுகளில் அரசியலமைப்பு உரிமைகள் மற்றும் விதிகள் மீறப்படுவதை மத்திய அரசு வேடிக்கை பார்க்கிறது” என விமர்சனம் தெரிவித்துள்ளார். 

மேலும் அவர், “ லட்சத்தீவுகளின் நிர்வாகி உடனடியாக திரும்பப் பெறப்பட்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள் ரத்து செய்யப்பட வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com