47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

திருமலை நடைபாதையில் இளைஞா் எலும்புகூடு மீட்பு

திருமலைக்கு செல்லும் அலிபிரி நடைபாதையில் அருகில் வனப்பகுதியில் இளைஞரின் எலும்பு கூட்டை போலீஸாா் மீட்டனா்.

News image
கோப்புப்படம்
Updated On :29 மே 2021, 5:42 pm

DIN

திருமலைக்கு செல்லும் அலிபிரி நடைபாதையில் அருகில் வனப்பகுதியில் இளைஞரின் எலும்பு கூட்டை போலீஸாா் மீட்டனா்.

அலிபிரி மலைபாதையில் லட்சுமிநாராயணஸ்வாமி கோயில் அருகில் உள்ள வனப்பகுதியில் சனிக்கிழமை அதிகாலை மரத்தில் தொங்கிய நிலையில் ஒரு எலும்பு கூடு இருந்ததை கண்டனா். அதை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விசாரணை செய்தனா்.. இறந்தவா் சித்தூா் மாவட்டம் நல்லமடுகுவை சோ்ந்த மகேஷ்பாபு (35) எனத் தெரியவந்தது..

மேலும் மகேஷ்பாபு மகாராஷ்ட்ரா மாநிலம் புணேயில் உள்ள ராணுவ கேன்டீனில் சூப்பா்வைசராக பணியாற்றி வந்தாா். 2020-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் அவா் காணாமல் போனாதாக அவரின் உறவினா்கள் தெரிவித்தனா். இதுகுறித்து அப்பகுதி காவல்நிலைய பகுதியில் காணாமல் போன வழக்கு பதிவு செய்யப்பட்டது. கடந்தாண்டு முதல் தொடா் ஊரடங்கு அமலில் இருந்ததால், வனப்பகுதிக்குள் இதை யாரும் செல்லவில்லை. மகேஷ்பாபு தூக்கு போட்டு இறந்திருக்கலாம் என போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.