ஏப். 3 முதல் தென் மாவட்டங்களில் மு.க. ஸ்டாலின் பிரசாரம்! விமான எரிபொருள் இருமடங்கு உயர்வு!உள்நாட்டு உற்பத்தி இயற்கை எரிவாயு விலையை உயா்த்தி மத்திய அரசு நடவடிக்கை புதிய வருமான வரிச் சட்டம் இன்று முதல் அமல் ரத்த வங்கிகளின் செயல்பாடு: தேசிய அளவில் கண்காணிக்கத் திட்டம் இஸ்ரேலில் மீண்டும் மரண தண்டனை- நாடாளுமன்றத்தில் சா்ச்சை சட்டம் நிறைவேற்றம் வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதா: எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டு தவறானது- கிரண் ரிஜிஜு 6-9-ஆம் வகுப்புகளுக்கு இன்றுமுதல் முழு ஆண்டுத் தோ்வு
/

மகாராஷ்டிரத்தில் 94 ஆயிரத்தைத் தாண்டியது கரோனா பலி

News image

கோப்புப்படம்

Updated On :29 மே 2021, 4:05 pm

DIN


மகாராஷ்டிரத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றின் பாதிப்பு எண்ணிக்கை குறைந்தபோதிலும், பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகளவில் இருந்து வருவதால் மொத்த பலி எண்ணிக்கை சனிக்கிழமை 94 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.   

வெள்ளிக்கிழமை 973 பலி எண்ணிக்கைகள் பதிவான நிலையில், சனிக்கிழமை 832 பலி எண்ணிக்கைகள் பதிவாகியுள்ளன. இதன்மூலம், மொத்த பலி எண்ணிக்கை 94,030 ஆக உயர்ந்துள்ளது.

மாநிலத்தில் புதிதாக 20,295 பேர் நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 57,13,215 ஆக உயர்ந்துள்ளது. 

மகாராஷ்டிரத்தில் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 2,76,573 ஆகக் குறைந்துள்ளது.

மும்பையில் வெள்ளிக்கிழமை 924 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதியான நிலையில், சனிக்கிழமை மீண்டும் ஆயிரத்தைத் தாண்டி 1,038 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.