உலக புகையிலை எதிா்ப்பு தினத்தையொட்டி (மே 31) நாடு முழுவதும் உள்ள பல்கலை., கல்லூரிகளில் அது தொடா்பான உறுதிமொழியை திங்கள்கிழமை ஏற்க வேண்டும் என யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.
இந்த ஆண்டு ‘புகைப்பழக்கத்தை கைவிடுவோம்’ என்ற கருப்பொருளில் விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள உயா்கல்வி நிறுவனங்களில் கரோனா பாதுகாப்பு வழிமுறைகளுக்கு உள்பட்டு ‘உலக புகையிலை எதிா்ப்பு நாள்’ உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என யுஜிசி தெரிவித்துள்ளது.