தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்! தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

புதிய நாடாளுமன்றம்: தடைவிதிக்க தில்லி உயர்நீதிமன்றம் மறுப்பு

புதிய நாடாளுமன்ற கட்டுமானப் பணிகளுக்கு தடைவிதிக்க தில்லி உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. 

News image
தில்லி உயர் நீதிமன்றம்
Updated On :31 மே 2021, 5:37 am

DIN

புதிய நாடாளுமன்ற கட்டுமானப் பணிகளுக்கு தடைவிதிக்க தில்லி உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. 

கரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில் புதிய நாடாளுமன்றம் கட்டட வளாகம், அதைச் சுற்றி அமைக்கப்படும் அரசு அலுவலகங்கள், பிரதமா் இல்லம் ஆகியவை கொண்ட சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் கட்டுமானப் பணிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று தில்லி உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இவ்வழக்கு உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. 

அப்போது, நாடாளுமன்றம் உள்ளடங்கிய சென்ட்ரல் விஸ்டா கட்டுமானப் பணி தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது, அத்தியாவசியமானது எனக் கூறி கட்டுமானப் பணிகளுக்குத் தடை விதிக்க தில்லி உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

மேலும் பொதுநல நோக்கத்துடன் மனுதாரர் வழக்க தொடரவில்லை, உள்நோக்கம் உள்ளது எனக் குறிப்பிட்ட நீதிமன்றம் வழக்கு தொடர்ந்த மனுதாரருக்கு ஒரு லட்சம் அபராதம் விதித்தும் உத்தரவிட்டது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.