மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அபாய கட்டத்தை எட்டிய காற்றுமாசு; தொண்டை, கண் எரிச்சலால் தவிக்கும் மக்கள்

வெள்ளிக்கிழமை காலை, ஜவஹர்லால் நேரு மைதானத்தில் பிஎம் 2.5 என்ற நுண் துகள்களின் அளவு 999ஆக அதிகரித்துள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :5 நவம்பர் 2021, 6:10 am

DIN

நாட்டின் தலைநகர் தில்லியில் காற்றின் தரம் நேற்று இரவு தீவிரமாக இருந்த நிலையில், தீபாவளி பண்டிகையை தொடர்ந்து இன்று காலை அது அபாய கட்டத்தை எட்டியுள்ளது. நகரின் காற்றின் தரக் குறியீடு தொடர்ந்து மோசமாகிவருகிறது. நேற்று மாலை 4 மணிக்கு, காற்றின் தரம் 382 ஆக இருந்தது. 

8 மணி அளவில், வெப்ப நிலை குறைந்த நிலையில், காற்றின் வேகம் காரணமாக மாசு நகரம் முழுவதும் பரவ தொடங்கியது. வெள்ளிக்கிழமை காலை, ஜவஹர்லால் நேரு மைதானத்தில் பிஎம் 2.5 என்ற நுண் துகள்களின் அளவு ஒரு கன மீட்டருக்கு 999ஆக அதிகரித்தது. உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைக்கப்பட்ட அளவு 25ஆகும்.

காற்றில் பரவும் 2.5 வகை நுண் துகள்கள், நுரையீரல் புற்றுநோய் போன்ற இருதய மற்றும் சுவாச நோய்களை ஏற்படுத்தும். அனைத்து உலகத் தலைநகரங்களையும் விட மோசமான காற்றின் தரம் தில்லியில் பதிவாகியுள்ளது. குறிப்பாக, வெள்ளிக்கிழமையன்று, காற்றின் தரம் மிகவும் மோசமாக உள்ளது. பசுமை பட்டாசு உள்பட அனைத்து வகை பட்டாசுகளை வெடிக்க தில்லி அரசு தடை விதித்துள்ள நிலையிலும், பெரும்பாலான இடங்களில் மக்கள் விதிகளை மீறி பட்டாசு வெடித்தனர்.

இரவு 9 மணிக்கு மேலாக, மக்கள் அதிக அளவில் பட்டாசு வெடித்த நிலையில், தில்லிக்கு அண்டை நகரமான ஃபரிதாபாத் (424), காசியாபாத் (442), குர்கான் (423),  நொய்டா (431) என்ற அளவில் காற்றின் தரம் பதிவானது. 

இதுகுறித்து ஆற்றல் மற்றும் சுத்தமான காற்று ஆராய்ச்சி மையத்தின் ஆய்வாளர் சுனில் தஹியா கூறுகையில், "தில்லியில் பட்டாசு தடை வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டதாக தெரியவில்லை. இது தற்போதுள்ள வற்றாத ஆதாரங்களின் மேல் அபாயகரமான மாசு அளவை சேர்க்க வழிவகுத்தது.

தெற்கு தில்லியில் உள்ள லஜ்பத் நகர், வடக்கு தில்லியில் உள்ள புராரி, மேற்கு தில்லியில் உள்ள பஸ்சிம் விஹார் மற்றும் கிழக்கு தில்லியில் உள்ள ஷாஹ்தாரா ஆகிய இடங்களில் வசிப்பவர்கள் இரவு 7 மணிக்கே பட்டாசு வெடிக்க தொடங்கியதாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், மாலை நேரத்தில் குறைவான அளவிலேயே பட்டாசு வெடிக்கப்பட்டுள்ளது. 

தொண்டை மற்றும் கண்களில் எரிச்சல் ஏற்பட்டதாக நகர் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் விசிக்கும் மக்கள் புகார் தெரிவித்திருந்தனர். ஹரியாணா அரசு தேசிய தலைநகர் பகுதியில் உள்ள 14 மாவட்டங்களில் அனைத்து வகையான பட்டாசுகளை விற்பனை செய்வதற்கும் பயன்படுத்துவதற்கும் தடை விதித்துள்ளது. மற்ற பகுதிகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.