தில்லியில் ஏப்ரல் 19-ஆம் தேதி முதல் நவம்பா் 12-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் கரோனா விதிகளை மீறியதற்காக மொத்தம் 3,16,565 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதில், முகக்கவசம் அணியாததற்காக 2,79,878 பேருக்கும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காததற்காக 30,385 பேருக்கும், பொது இடங்களில் மதுபானம், பான், புகையிலை உட்கொண்டதற்காக 3,152 பேருக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பொது இடங்களில் எச்சில் துப்பியதற்காக 1,685 பேருக்கும், பெரிய பொதுக்கூட்டங்கள், நிகழ்ச்சிகளை நடத்தியதாக 1,465 பேருக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.