ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

‘கோமியம், சாணத்தின் மூலம் பொருளாதாரத்தை மேம்படுத்தலாம்’: ம.பி. முதல்வர்

மாட்டின் கோமியம் மற்றும் சாணத்தை முறையாகப் பயன்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த முடியும் என மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் செளகான் பேசியுள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

News image
மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் செளகான்
Updated On :13 நவம்பர் 2021, 5:49 pm

DIN

மாட்டின் கோமியம்மற்றும் சாணத்தை முறையாகப் பயன்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த முடியும் என மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் செளகான் பேசியுள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

இந்திய கால்நடை மருத்துவ சங்கத்தின் மகளிர் பிரிவு மாநாடு போபாலில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் மாநில முதல்வர் சிவராஜ் சிங் செளகான் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது பேசிய அவர், “மாட்டின் கோமியம் மற்றும் சாணத்தை பயன்படுத்தி மாநிலம் மற்றும் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியும்” எனத் தெரிவித்தார்.

மேலும், “சரியான முறையில் அவற்றைக் கையாண்டால் பொருளாதாரம் மேம்படும் என சிவராஜ் சிங் செளகான் பேசினார். "பசுவின் சாணம் மற்றும் சிறுநீரை பயன்படுத்தி பூச்சிக்கொல்லிகள், உரங்கள் மற்றும் பல பொருட்களை தயாரிக்கலாம் எனவும் மத்தியப் பிரதேச அரசு தகன மேடைகளில் மரத்திற்கு பதிலாக மாட்டு சாணத்தை பயன்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறோம்” என சிவராஜ் சிங் செளகான் தெரிவித்தார்.

மேலும் கால்நடைகளுக்கு விரைவான மருத்துவ சேவையை உறுதி செய்ய சிறப்பு ஆம்புலன்ஸ் தொடங்கப்படும் எனவும் அவர் அறிவித்தார். மாநில முதல்வரின் இந்தக் கருத்து சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.