மாட்டின் கோமியம்மற்றும் சாணத்தை முறையாகப் பயன்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த முடியும் என மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் செளகான் பேசியுள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
இந்திய கால்நடை மருத்துவ சங்கத்தின் மகளிர் பிரிவு மாநாடு போபாலில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் மாநில முதல்வர் சிவராஜ் சிங் செளகான் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது பேசிய அவர், “மாட்டின் கோமியம் மற்றும் சாணத்தை பயன்படுத்தி மாநிலம் மற்றும் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியும்” எனத் தெரிவித்தார்.
மேலும், “சரியான முறையில் அவற்றைக் கையாண்டால் பொருளாதாரம் மேம்படும் என சிவராஜ் சிங் செளகான் பேசினார். "பசுவின் சாணம் மற்றும் சிறுநீரை பயன்படுத்தி பூச்சிக்கொல்லிகள், உரங்கள் மற்றும் பல பொருட்களை தயாரிக்கலாம் எனவும் மத்தியப் பிரதேச அரசு தகன மேடைகளில் மரத்திற்கு பதிலாக மாட்டு சாணத்தை பயன்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறோம்” என சிவராஜ் சிங் செளகான் தெரிவித்தார்.
இதையும் படிக்க | தமிழகத்தில் இன்று புதிதாக 809 பேருக்கு கரோனா
மேலும் கால்நடைகளுக்கு விரைவான மருத்துவ சேவையை உறுதி செய்ய சிறப்பு ஆம்புலன்ஸ் தொடங்கப்படும் எனவும் அவர் அறிவித்தார். மாநில முதல்வரின் இந்தக் கருத்து சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி.. சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் சரிவு!

கோஹினூர் வைரத்தை இந்தியாவிடம் கொடுக்க பிரிட்டன் மன்னரிடம் கோருவேன்! மம்தானி
மே 4 - எங்கும் தாமரை மலரும்! பாஜக

மதுரை நகரை வந்தடைந்தார் கள்ளழகர்! எதிர்சேவையில் ஆடல், பாடலுடன் உற்சாக வரவேற்பு!!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


