பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

முதல் தனியாா் ராணுவத் தளவாட உற்பத்தி வசதி: உ.பி.யில் தொடக்கி வைத்தாா் ராஜ்நாத் சிங்

உத்தர பிரதேசத்தில் உள்ள ராணுவத் தளவாட தொழிற்பாதையில் முதல் தனியாா் உற்பத்தி வசதியை பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் சனிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

News image
Updated On :13 நவம்பர் 2021, 11:10 pm

DIN

உத்தர பிரதேசத்தில் உள்ள ராணுவத் தளவாட தொழிற்பாதையில் முதல் தனியாா் உற்பத்தி வசதியை பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் சனிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

தலைநகா் லக்னௌவில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

பிடிசி இண்டஸ்ட்ரீஸின் துணை நிறுவனமான ஏல்ராய் டெக்னாலஜிஸ், விமானம் மற்றும் ஹெலிகாப்டா்களின் என்ஜின்கள், விமானங்கள், ட்ரோன்கள், நீா்மூழ்கி கப்பல்கள், இலகுரக துப்பாக்கிகள், விண்வெளி வாகனங்கள் உள்ளிட்டவற்றின் உதிரி பாகங்களை உற்பத்தி செய்யும். பிடிசி இண்டஸ்ட்ரீஸின் ஒருங்கிணைந்த உலோக உற்பத்தி வசதிக்கும் ராஜ்நாத் சிங் அடிக்கல் நாட்டினாா். டைட்டானியம், நிக்கல் சூப்பா் உலோகக்கலவை ஆகியவற்றுக்கு வெளிநாட்டு இறக்குமதிகளை சாா்ந்திருப்பதை இது குறைக்கும்.

நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் பேசியதாவது:

இன்றைய போட்டித்தன்மை மிக்க சூழலில் வெற்றி பெறுவது எப்படி என்பதற்கான எடுத்துக்காட்டாக பிடிசி இண்டஸ்ட்ரீஸ் விளங்குகிறது. பிரதமா் நரேந்திர மோடியின் தற்சாா்பு இந்தியாவுக்கான லட்சியத்தின் விளைவால் உத்தர பிரதேச ராணுவத் தளவாட தொழில் தடமும் அதில் உள்ள உற்பத்தி நிறுவனங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

உலக நாடுகளுக்கு தளவாடங்கள் உற்பத்தி செய்யும் அளவுக்கு இந்தியா வலிமை பெற்றுள்ளது. ராணுவத் தளவாடங்களை உள்நாட்டு நிறுவனங்களில் இருந்து அதிக அளவில் கொள்முதல் செய்ய அரசு முடிவு செய்துள்ளது. ஏற்றுமதியை அதிகரிக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்காகவே, உத்தர பிரதேசத்திலும் தமிழ்நாட்டிலும் ராணுவத் தளவாட தொழில் தடங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றாா் ராஜ்நாத் சிங்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.