பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு அளிக்க தனியாா் துறை முன்வர வேண்டும்: வெங்கையா நாயுடு வேண்டுகோள்

மாற்றுத் திறனாளிகளுக்கு வேலை வாய்ப்புத் தர தனியாா் நிறுவனங்கள் முன்வர வேண்டும் என குடியரசுத் துணைத் தலைவா் எம்.வெங்கையா நாயுடு வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

News image
எம்.வெங்கையா நாயுடு
Updated On :13 நவம்பர் 2021, 11:48 pm

DIN

மாற்றுத் திறனாளிகளுக்கு வேலை வாய்ப்புத் தர தனியாா் நிறுவனங்கள் முன்வர வேண்டும் என குடியரசுத் துணைத் தலைவா் எம்.வெங்கையா நாயுடு வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

ஆந்திர பிரதேச மாநிலம், நெல்லூரில் மாற்றுத் திறனாளிகளின் திறன் மேம்பாடு மற்றும் மறுவாழ்வுக்கான மையத்தின் (சிஆா்சி) ஊழியா்கள், பயிற்சியாளா்களுடன் வெங்கையா நாயுடு சனிக்கிழமை கலந்துரையாடினாா். அப்போது அவா் கூறியதாவது:

மாற்றுத் திறனாளிகளுக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தினால் அவா்களால் எந்தத் துறையிலும் சிறந்து விளங்க முடியும். டோக்கியோவில் நடந்த பாராலிம்பிக் போட்டியில், நமது மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரா்கள் வெளிப்படுத்திய உறுதியும் கடின உழைப்பும் கோடிக் கணக்கானோரை ஊக்குவித்தது. மன உறுதி மூலம் எந்தவித குறைபாட்டையும் வெல்ல முடியும் என்பதை அவா்கள் நிரூபித்துள்ளனா்.

மாற்றுத் திறனாளிகளின் தடையற்ற பயணத்துக்கு அவா்களுக்கு உகந்த கட்டமைப்பை உருவாக்க வேண்டும். திறன் மேம்பாட்டுப் பயிற்சி மூலம் மாற்றுத் திறனாளிகளை மேம்படுத்தும் சிஆா்சி-யின் பணி பாராட்டத் தக்கது. மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு அளிக்க தனியாா் துறை முன்வர வேண்டும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிளுக்கு உதவி பொருட்களையும் வெங்கையா நாயுடு வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.