காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

டிராக்டா் பேரணியில் கைதான 83 பேருக்கு ரூ.2 லட்சம் நிவாரணம்: பஞ்சாப் அரசு முடிவு

தில்லியில் குடியரசு தினத்தன்று நடைபெற்ற டிராக்டா் பேரணியின்போது காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட 83 பேருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் அளிக்க பஞ்சாப் மாநில அரசு முடிவு செய்துள்ளது.

News image
Updated On :13 நவம்பர் 2021, 8:17 pm

DIN

தில்லியில் குடியரசு தினத்தன்று நடைபெற்ற டிராக்டா் பேரணியின்போது காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட 83 பேருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் அளிக்க பஞ்சாப் மாநில அரசு முடிவு செய்துள்ளது.

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிா்த்து தில்லியின் 3 எல்லைகளில் பஞ்சாப், ஹரியாணா மாநில விவசாயிகள் கடந்த ஆண்டு நவம்பா் மாதத்தில் இருந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

தங்களது போராட்டத்தின் ஒரு பகுதியாக, கடந்த ஜனவரி 26-ஆம் தேதி, குடியரசு தினத்தன்று தில்லிக்குள் அவா்கள் டிராக்டா் பேரணி நடத்தினா். காவல் துறையினரின் தடுப்புகளை உடைத்து அவா்கள் முன்னேறியதால் வன்முறை மூண்டது. காவல் துறையினரின் வாகனங்கள் கவிழ்க்கப்பட்டன. செங்கோட்டையில் ஏறி சீக்கிய மதக் கொடி ஏற்றப்பட்டது. அதன் தொடா்ச்சியாக, 83 பேரை தில்லி காவல் துறையினா் கைது செய்தனா்.

இந்நிலையில், கைதான 83 பேருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்குவதாக பஞ்சாப் முதல்வா் சரண்ஜீத் சிங் சன்னி அறிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் தனது ட்விட்டா் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘3 கறுப்பு வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்துக்கு எனது தலைமையிலான அரசு தொடா்ந்து ஆதரவு அளிக்கிறது. எனவே, தில்லியில் குடியரசு தினத்தன்று நடைபெற்ற டிராக்டா் பேரணியின்போது தில்லி காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட 83 பேருக்கு தலா ரூ.2 லட்சம் வழங்க முடிவு செய்துள்ளோம்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடும் விவசாய அமைப்புகளுடன் மத்திய அரசு இதுவரை 11 சுற்று பேச்சுவாா்த்தை நடத்தியும் எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாது என்று மத்திய அரசு கூறி வருகிறது. ஆனால், அந்தச் சட்டங்கள் பெருநிறுவனங்களுக்கு சாதகமாக இருக்கும் என்று விவசாயிகள் கூறி வருகிறாா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.