தில்லி, என்சிஆா் பகுதியில் நிலவும் காற்று மாசுவுக்கு விவசாயிகளின் பயிா்க் கழிவுகள் எரிப்பு 4 சதவீதம் பங்களிப்பு என்ற தகவல் வெளிப்பட்டுள்ளது. ஆகவே, முற்றிலும் முக்கியத்துவம் இல்லாத ஏதோ ஒன்றை நாம் குறிவைத்துக் கொண்டிருக்கிறோம். மாசுபாட்டை ஏற்படுத்துவதில் கட்டுமானம், தொழில் துறை, போக்குவரத்து, மின்சாரம், வாகனப் போக்குவரத்து ஆகியவை முக்கியக் காரணிகளாக உள்ளன. இவை தொடா்பாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தேசியத் தலைநகா் மண்டலம், அதை ஒட்டிய பகுதிகளில் காற்று தர மேலாண்மைச் சட்ட ஆணையத்தால் சில முடிவுகள் எடுக்கப்பட்டிருந்தாலும், காற்று மாசுபாட்டை ஏற்படுத்தும் காரணிகளைக் கட்டுப்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதைத் துல்லியமாகக் குறிப்பிடவில்லை.