பிகார் முதல்வர் பதவிலிருந்து விலகுகிறேன்! நிதீஷ் குமார் அறிவிப்பு!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

அனைத்து சவால்களையும் ஒற்றுமையுடன் எதிர்கொள்ள வேண்டும் - பிரதமர் மோடி

அகில இந்திய அவைத் தலைவர்கள் மாநாட்டில் இன்று பேசிய மோடி இந்தியர்கள் அனைத்து சவால்களையும் ஒற்றுமையுடன் எதிர்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்திருக்கிறார்.

News image
பிரதமர் மோடி (கோப்புப்படம்)
Updated On :17 நவம்பர் 2021, 7:01 am

DIN

அகில இந்திய அவைத் தலைவர்கள் மாநாட்டில் இன்று பேசிய மோடி இந்தியர்கள் அனைத்து சவால்களையும் ஒற்றுமையுடன் எதிர்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்திருக்கிறார்.

82-வது அகில இந்திய அவைத் தலைவர்கள் மாநாடு சிம்லாவில் நடைபெற்று வருகிறது. முன்னதாக மாநாட்டிற்கு தலைமை தாங்கிய பிரதமர் மோடி கரோனாவைக் கட்டுப்படுத்த நாம் அனைவரும் அனைத்து சவால்களையும் ஒற்றுமையுடன் எதிர்கொள்ள வேண்டும் என்றதுடன் 110 கோடியைக் கடந்த தடுப்பூசிகளைச் செலுத்தி புதிய மைல்கல்லை அடைந்துள்ளோம்.அசாதாரண இலக்குகளைக் கொண்டு நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்றார். 

மேலும் என் சிந்தனை படி ‘ஒரு நாடு ஒரு சட்டமன்றம்’ என்பது பாராளுமன்றத்தில் தொழில்நுட்ப ஊக்கத்தை மட்டுமல்லாது தேசத்தை ஜனநாயக ரீதியாகவும் இணைக்கவல்லது என தன்னுடைய உரையில் குறிப்பிட்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.