ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மோடி தேர்தல் தோல்வியை உணரத் தொடங்கியிருக்கிறார்: பிரியங்கா காந்தி

வேளாண் சட்டத்தை ரத்து செய்தது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரான பிரியங்கா காந்தி மோடியை விமர்சித்திருக்கிறார்.

News image

காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி

Updated On :19 நவம்பர் 2021, 9:13 am

DIN

வேளாண் சட்டத்தை ரத்து செய்தது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரான பிரியங்கா காந்தி மோடியை விமர்சித்திருக்கிறார்.

வேளாண் சட்ட மசோதாவை எதிர்த்து தில்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம்  நடைபெற்று வந்த நிலையில் இன்று பிரதமர் மோடி அதை ரத்து செய்வதாக அறிவித்தார்.

அதனை வரவேற்கும் விதமாக பல்வேறு கட்சித் தலைவர்களும் தங்களின் கருத்துக்களைத் தெரிவித்து வரும் நிலையில் பிரியங்கா காந்தி தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் , ‘ இதுவரை போராட்டத்தில் 600 விவசாயிகள் பலியாகியிருக்கிறார்கள். 300 நாட்களுக்கு மேல் போராட்டம் நடைபெற்று வருகிறது. நீங்கள்(மோடி) கண்டுகொள்ளவில்லை.  சட்டத்தை எதிர்த்துப் போராடிய விவசாயிகளை உங்கள் கட்சினர் (பாஜக) தீவிரவாதிகள் , தேசத் துரோகிகள் , அடியாட்கள் என குற்றச் சாட்டினர். அவர்களை ஆயுதங்களால் தாக்கினார்கள். தற்போது விவசாயிகளின் எழுச்சியால் தேர்தலில் தோற்றுவிடுவோம் என உணர்ந்ததும் திடீரென எதார்த்தத்தைப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். விவசாயிகளை எதிர்த்து எந்த அரசாலும் செயல்பட முடியாது’ எனத் தெரிவித்திருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.