ஒடிசாவில் 50% இருக்கைகளுடன் திரையங்குகளைத் திறக்க அனுமதி

கரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளதைத் தொடர்ந்து 50 சதவிகித இருக்கைகளுடன் திரையரங்குகளைத் திறக்க அம்மாநில அரசு அனுமதியளித்துள்ளது.
ஒடிசாவில் கட்டுப்பாடுகளுடன் திரையங்குகளைத் திறக்க அனுமதி
ஒடிசாவில் கட்டுப்பாடுகளுடன் திரையங்குகளைத் திறக்க அனுமதி

கரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளதைத் தொடர்ந்து 50 சதவிகித இருக்கைகளுடன் திரையரங்குகளைத் திறக்க அம்மாநில அரசு அனுமதியளித்துள்ளது.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோன பரவல் கட்டுக்குள் வந்துள்ளதைத் தொடர்ந்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. பெரும்பாலான மாநிலங்களில் பொதுமுடக்கக் கட்டுப்பாடுகள் முழுவதுமாக தளர்த்தப்பட்டு வரும் நிலையில் ஒடிசா மாநிலத்தில் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு வருகின்றன.

ஒடிசா மாநிலத்தில் கரோனா பரவல் சூழல் கட்டுக்குள் வந்துள்ளதைத் தொடர்ந்து 50 சதவிகித இருக்கைகளுடன் மீண்டும் திரையரங்குகளைத் திறக்க அம்மாநில அரசு அனுமதியளித்துள்ளது.

கலாச்சார நிகழ்வுகள் உள்பட பொது நிகழ்ச்சிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதேசமயம் உள் அரங்குகளில் நடைபெறும் நிகழ்ச்சிகள் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றி நடத்தப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒடிசா மாநிலத்தில் இதுவரை 10,46,798 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com