மருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

‘ஆக்கிரமிப்பு எனும் உண்மையை ஏற்கத்தான் வேண்டும்’: சீனா உடனான எல்லை பிரச்னையில் ராகுல் விமர்சனம்

எல்லைப் பகுதியில் சீனா ஆக்கிரமித்துள்ள உண்மையை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

News image

ராகுல் காந்தி

Updated On :20 நவம்பர் 2021, 6:00 pm IST

எல்லைப் பகுதியில் சீனா ஆக்கிரமித்துள்ள உண்மையை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

இந்தியா-சீனா இடையேயான லடாக் எல்லைப் பிரச்னை தீர்க்கப்படாமல் தொடர்ந்து நீடித்து வருகிறது. எல்லைப் பிரச்னையை சமாளிக்க மேற்கொள்ளப்பட்ட பல கட்டப் பேச்சுவார்த்தைகள் வெற்றி பெறாத நிலையில் இரு நாடுகளுக்கிடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சிங்கப்பூரில் நடைபெற்ற புதிய பொருளாதார மாநாட்டில் பேசிய மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், “இந்தியா - சீனா இடையேயான உறவானது இப்போது மோசமான காலகட்டமாக உள்ளது’ எனத் தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ராகுல்காந்தி, “சீனா உடனான எலலைப் பிரச்னையில் சீன ஆக்கிரமிப்பு எனும் உண்மையை மத்திய அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 2020ஆம் ஆண்டு இரு நாடுகளிடையே மோதல் ஏற்பட்டது. இந்த நிலையில், அடுத்தகட்டமாக இரு தரப்பு ராணுவ அதிகாரிகளிடையேயான 14-ஆம் சுற்று பேச்சுவாா்த்தை விரைவில் நடத்தவும் இரு நாடுகளும் கடந்த வியாழக்கிழமை ஒப்புக்கொண்டன என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.