இந்தியா - இலங்கை டெஸ்ட் தொடர்: ரசிகர்கள் இலவசமாக கண்டு ரசிக்கலாம்! செஸ் சாம்பியன் பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து!இந்தியாவுக்கு 67% எல்பிஜி தேவையைப் பூர்த்தி செய்யும் அமெரிக்கா!டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 2 காசுகள் உயர்ந்து ரூ. 95.20 ஆக நிறைவு!பங்குச் சந்தை சரிவு: சென்செக்ஸ் 450 புள்ளிகளுக்கும், நிஃப்டி 24,550க்கு அருகில் சென்று நிறைவு!!பாகிஸ்தான், சௌதியுடன் கைகோர்க்கும் துருக்கி! முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம்! ஐரோப்பா டி20 பிரீமியர் லீக்கில் விளையாடும் அஜிங்க்யா ரஹானே! செயின்ட் லூயிஸ் ரேப்பிட்- பிளிட்ஸ் செஸ்: பிரக்ஞானந்தா சாம்பியன்! ஒரே வாரத்தில் சவரனுக்கு ரூ. 5,400 உயர்வு: தங்கம் விலை மாலை நிலவரம்!
/

நவ.29ஆம் தேதி நாடாளுமன்றம் நோக்கி டிராக்டர் பேரணி

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடாளுமன்றத்தை நோக்கி நவம்பர் 29ஆம் தேதி டிராக்டர் பேரணி நடைபெறும் என வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடும் விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :28 ஜனவரி 2024, 11:00 am IST

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடாளுமன்றத்தை நோக்கி நவம்பர் 29ஆம் தேதி டிராக்டர் பேரணி நடைபெறும் என வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடும் விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பல்வேறு மாநில விவசாயிகள் கடந்த ஓராண்டாக போராடி வருகின்றனர். இந்நிலையில் வெள்ளிக்கிழமை நாட்டு மக்களிடையே பேசிய பிரதமர் மோடி மூன்று புதிய வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப் பெறுவதாகவும், போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாயிகள் போராட்டத்தைக் கைவிடவும் வலியுறுத்தினார்.

மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் விவசாயிகள் வரவேற்பு தெரிவித்தனர். இருப்பினும் இதுகுறித்து பேசிய விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் நாடாளுமன்றத்தில் புதிய  வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும் வரை போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என தெரிவித்தார்.

இந்நிலையில் நவம்பர் 29ஆம் தேதி நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில் அந்த தினம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகளின் டிராக்டர் பேரணி நடைபெறும் என விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.

வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடிய விவசாயிகள் மீதான வழக்குகளை ரத்து செய்யவும், மின்சார சட்டத்திருத்தத்தை திரும்பப் பெறவும் மற்றும் வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் பலியான விவசாயிகளுக்கு நினைவுச் சின்னம் அமைக்க இடம் ஒதுக்கக் கோரியும் இந்த டிராக்டர் பேரணி நடைபெறும் என விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.