ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

சீக்கிய சமூகத்தை இழிவுபடுத்தியதாக கங்கனா ரணாவத் மீது வழக்குப் பதிவு

சீக்கிய சமூகத்தை இழிவுபடுத்தும் வகையில் சமூக ஊடகப் பதிவில் பேசியதாக நடிகை கங்கனா ரணாவத் மீது மும்பை காவல் துறை செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

News image
கோப்புப்படம்
Updated On :23 நவம்பர் 2021, 3:05 pm

DIN


சீக்கிய சமூகத்தை இழிவுபடுத்தும் வகையில் சமூக ஊடகப் பதிவில் பேசியதாக நடிகை கங்கனா ரணாவத் மீது மும்பை காவல் துறை செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தில்லி சீக்கிய குருத்வாரா மேலாண்மைக் குழு (டிஎஸ்ஜிஎம்சி) அளித்த புகாரின்பேரில் கங்கனா ரணாவத்துக்கு எதிராக சபர்பன் கர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளது. பிரிவு 295ஏ-வின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதுதொடர்பாக மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும் அதிகாரி தெரிவித்தார்.

சிரோமணி அகாலி தளம் கட்சியைச் சேர்ந்த மன்ஜிந்தர் சிங் டிஎஸ்ஜிஎம்சி அமைப்பின் தலைவராகவும் உள்ளார். அவரது தலைமையிலான குழு, காவல் துறையிடம் புகார் அளித்தவுடன், மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் திலிப் பாட்டீல் மற்றும் மும்பை காவல் துறை உயர் அதிகாரிகளைச் சந்தித்து கங்கனாவுக்கு எதிராக நடவடக்கை எடுக்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, அவர் மீது தற்போது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.