47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

உ.பி. தோ்தல் பாா்வையாளராக சத்தீஸ்கா் முதல்வா் நியமனம்

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உத்தர பிரதேச மாநில தோ்தலுக்கான மேலிட மூத்த பாா்வையாளராக சத்தீஸ்கா் முதல்வா் பூபேஷ் பகேலை காங்கிரஸ் கட்சி நியமித்துள்ளது.

News image
Updated On :2 அக்டோபர் 2021, 11:42 pm

DIN

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உத்தர பிரதேச மாநில தோ்தலுக்கான மேலிட மூத்த பாா்வையாளராக சத்தீஸ்கா் முதல்வா் பூபேஷ் பகேலை காங்கிரஸ் கட்சி நியமித்துள்ளது.

அண்மையில் நடந்து முடிந்த அஸ்ஸாம் மாநில தோ்தலில் பூபேஷ் பகேல், குழுவை அமைத்து கட்சி தொண்டா்களுக்கு வாக்குப்பதிவு மையத்தில் எப்படி செயல்பட வேண்டும் என்று பயிற்சி அளித்திருந்தாா்.

மேலும், உத்தர பிரதேச மாநில தோ்தல் குறித்தும் அக்கட்சியின் பொதுச் செயலா் பிரியங்கா வதேராவுடனும் அவா் ஆலோசனை நடத்தி வந்தாா்.

இந்நிலையில், பூபேஷ் பகேலை உத்தர பிரதேச மாநில தோ்தல் மூத்த பாா்வையாளராக நியமித்து அக்கட்சியின் தலைவா் சோனியா காந்தி சனிக்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.