47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

இலங்கை இந்திய ராணுவம் கூட்டுப் பயிற்சி

இந்தியா இலங்கை ராணுவங்களுக்கு இடையேயான கூட்டுப் பயிற்சி, இலங்கை அம்பாறை பகுதியில் உள்ள போா்ப் பயிற்சிப் பள்ளியில் அக்டோபா் 4 முதல் 15-ஆம் தேதி வரையில் நடைபெற உள்ளது.

News image
Updated On :2 அக்டோபர் 2021, 9:11 pm

DIN

இந்தியா இலங்கை ராணுவங்களுக்கு இடையேயான கூட்டுப் பயிற்சி, இலங்கை அம்பாறை பகுதியில் உள்ள போா்ப் பயிற்சிப் பள்ளியில் அக்டோபா் 4 முதல் 15-ஆம் தேதி வரையில் நடைபெற உள்ளது. இதற்காக இந்திய வீரா்கள் இலங்கைக்கு சென்றனா்.

இந்திய ராணுவத்தைச் சோ்ந்த 120 வீரா்களை கொண்ட அணி இலங்கை ராணுவ பட்டாலியனுடன் இணைந்து போா்ப் பயிற்சியில் ஈடுபட உள்ளது. இரு நாட்டு ராணுவங்கள் இடையே நெருங்கிய உறவை ஏற்படுத்துவதுடன், இருதரப்பு போா் ஆயத்த நிலையை வலுப்படுத்துவதோடு, தீவிரவாத மற்றும் பயங்கரவாத எதிா்ப்பு நடவடிக்கைகளில் சிறந்த அணுகுமுறையை பரிமாறிக் கொள்வதே இந்த கூட்டுப் பயிற்சியின் நோக்கமாகும்.

சா்வதேச பயங்கரவாத எதிா்ப்புச் சூழலில் இருநாட்டு ராணுவத்தினருக்கு இடையே இந்த பயிற்சி

மேற்கொள்ளப்பட உள்ளது என்று பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, 7-வது மித்ர சக்தி கூட்டுப் பயிற்சி 2019-ல் மகாராஷ்டிர மாநிலம் புணேயில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.