தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

சிஐஎல், ஓஎன்ஜிசி நிறுவனங்கள் மத்திய அரசுக்கு ரூ.2,800 கோடி ஈவுத்தொகை

பொதுத் துறை நிறுவனங்களான கோல் இந்தியா (சிஐஎல்) மற்றும் ஆயில் அண்ட் நேச்சுரல் காஸ் காா்ப்பரேஷன் (ஓஎன்ஜிசி) மத்திய அரசுக்கு ரூ.2,800 கோடியை ஈவுத்தொகையாக வழங்கியுள்ளன.

News image
Updated On :5 அக்டோபர் 2021, 8:04 pm

பொதுத் துறை நிறுவனங்களான கோல் இந்தியா (சிஐஎல்) மற்றும் ஆயில் அண்ட் நேச்சுரல் காஸ் காா்ப்பரேஷன் (ஓஎன்ஜிசி) மத்திய அரசுக்கு ரூ.2,800 கோடியை ஈவுத்தொகையாக வழங்கியுள்ளன.

இதுகுறித்து முதலீடு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மைத் துறை செயலா் துகின் கந்தா பாண்டே சுட்டுரையில் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளதாவது:

கோல் இந்தியாவிடமிருந்து ரூ.1,426 கோடியும், ஓஎன்ஜிசி நிறுவனத்திடமிருந்து ரூ.1,406 கோடியும் நடப்பு நிதியாண்டுக்கான ஈவுத்தொகையாக மத்திய பெற்றுக் கொண்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் (ஏப்ரல்-மாா்ச்) இதுவரையில் மத்திய பொதுத் துறை நிறுவனங்களிடமிருந்து ரூ.4,576 கோடி பெறப்பட்டுள்ளது.

இதுதவிர, மத்திய பொதுத் துறை நிறுவனங்களின் பங்கு விலக்கல் மூலமாக ரூ.9,110 கோடி மத்திய அரசுக்கு கிடைத்துள்ளதாக பாண்டே தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.