தில்லியில் எல்பிஜி சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டதில் தாய் மற்றும் இரண்டு குழந்தைகள் பலியாகினர்.
தலைநகர் தில்லியில் ஆனந்த் பர்பத் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு 9.05 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்புத்துறைக்கு தகவல் சென்றுள்ளது. இதையடுத்து 2 தீயணைப்பு வாகனங்களுடன் தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
தீயை முழுமையாக அணைக்க இரண்டு மணி நேரம் ஆனதாகவும் இரவு 11.15 மணியளவில் தீ அணைக்கப்பட்டதாகவும் தீயணைப்பு அதிகாரி தெரிவித்துள்ளார். இதில், காயமடைந்த நிலையில் 4 பேர் மீட்கப்பட்ட நிலையில் சுசிலா(35) என்பவர் உயிரிழந்தார். காயமடைந்த அவரின் மகள்கள் மேஹா(9) மான்சி(7), மகன் மோகன் (7) ஆகிய மூவரும் ஆர்எம்எல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்நிலையில், மான்சி மற்றும் மோகனும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். தற்போது மேஹா மட்டும் 40% காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

சென்னையில் தொடா்ந்து 5 ஆட்டங்களில் சிஎஃப்சி பங்கேற்பு

எந்த இடத்திலும் வழிபாடு நடத்துவது மத சுதந்திரம் கிடையாது : மும்பை உயா்நீதிமன்றம்
இனி வாட்ஸ் ஆப் மூலம் 108 ஆம்புலன்ஸ் சேவை! அவசர கால உதவியை விரைந்து பெறலாம்

அடுத்த இரு நாள்களுக்கு நீலகிரி, கோவையில் மழைக்கு வாய்ப்பு
வீடியோக்கள்

Podcast | செல்வப்பெருந்தகை சந்தித்த சவால்கள் | News and Views | Epi - 11
தினமணி வீடியோ செய்தி...

திமுக - காங்கிரஸ் கூட்டணியில் நல்ல முடிவு: கனிமொழி சோமு எம்.பி.
தினமணி வீடியோ செய்தி...

அரையிறுதியில் வெளிப்பட்ட நியூசி.யின் ருத்ரதாண்டவம்: அடிபணிந்த தெ.ஆ.! |
தினமணி வீடியோ செய்தி...

இரண்டாம் அரையிறுதிப் போர்: பழிதீர்க்குமா இங்கிலாந்து?
தினமணி வீடியோ செய்தி...

