லக்கிம்பூர் செல்ல ராகுல், பிரியங்காவுக்கு அனுமதி
லக்கிம்பூர் கேரி செல்வதற்கு ராகுல் காந்தி, பிரியங்கா காந்திக்கு அனுமதி அளித்து உத்தரப்பிரதேச அரசு புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.


லக்கிம்பூர் கேரி செல்வதற்கு ராகுல் காந்தி, பிரியங்கா காந்திக்கு அனுமதி அளித்து உத்தரப்பிரதேச அரசு புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் லக்கீம்பூா் மாவட்டத்தில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயிகள் மீது கார் ஏற்றி கொலை செய்த சம்பவம் பூதாகரமாகியுள்ளது.
இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற சென்ற காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ராகுல்காந்தி, பஞ்சாப் முதல்வர் சரண்ஜீத் சிங் சன்னி, சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பகேல் இன்று லக்கிம்பூர் கேரிக்கு சென்று கொண்டுள்ளனர்.
இதற்கிடையே சட்டம் - ஒழுங்கு பிரச்னை காரணமாக ராகுல் உள்ளிட்டோர் லக்கிம்பூர் செல்வதற்கு உத்தரப் பிரதேச அரசு இன்று காலை அனுமதி மறுத்தது.
ஆனால், லக்கிம்பூர் செல்வதை யாராலும் தடுக்க முடியாது எனக் கூறிய ராகுல், தில்லியிலிருந்து லக்னெளக்கு விமானத்தில் வந்துகொண்டுள்ளார்.
இந்நிலையில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, இரு மாநில முதல்வர்கள் லக்கிம்பூர் செல்ல அனுமதி அளித்து உ.பி. அரசு தற்போது உத்தரவிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...