வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

விவசாயிகள் மீது ஏன் இவ்வளவு வெறுப்பு? பிரதமர் மோடிக்கு தில்லி முதல்வர் கேள்வி

பிரதமர் மோடிக்கு விவசாயிகள் மீது ஏன் இவ்வளவு வெறுப்பு என தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.

News image
தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால்
Updated On :6 அக்டோபர் 2021, 11:12 am

DIN

பிரதமர் மோடிக்கு விவசாயிகள் மீது ஏன் இவ்வளவு வெறுப்பு என தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.

லக்கிம்பூரில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தின் போது கார் ஏற்றி விவசாயிகள் கொல்லப்பட்ட விவகாரத்தில்  மத்திய அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமரிசித்து வருகின்றன.

இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் இந்த குற்றச்செயலுடன் தொடர்புடையவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மத்திய அமைச்சர் அஜய்குமார் மிஸ்ராவின் மகன் இந்த சம்பவத்தில் தொடர்புடையவராக இருப்பதாகத் தெரிவித்த கேஜரிவால் ஒட்டுமொத்த அமைப்பும் குற்றவாளிகளைக் காப்பதில் குறியாக இருப்பதாகவும், இதனுடன் தொடர்புடையவர்கள் இதுவரை கைது செய்யப்படாதது ஏன் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த ஓராண்டாக விவசாயிகள் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 600க்கும் மேற்பட்ட விவசாயிகள் பலியாகியுள்ளனர். பிரதமர் மோடிக்கு விவசாயிகள் மீது ஏன் இவ்வளவு வெறுப்பு என கேஜரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.

லக்கிம்பூர் செல்லும் எதிர்க்கட்சியினரை உத்தரப்பிரதேச அரசு தடுப்பு நிறுத்துவது கண்டிக்கத்தக்கது என தில்லி முதல்வர் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.