சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

2021-ல் மட்டும் பயங்கரவாதிகளால் 28 பேர் சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீர் எல்லையில் 2021-ம் ஆண்டு மட்டும் 28 பொதுமக்கள் பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

News image

2021-ல் மட்டும் பயங்கரவாதிகளால் 28 பேர் சுட்டுக்கொலை

Updated On :7 அக்டோபர் 2021, 4:34 pm

DIN

ஜம்மு-காஷ்மீர் எல்லையில் 2021-ம் ஆண்டு மட்டும் 28 பொதுமக்கள் பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

சமீபகாலமாக எல்லைப் பகுதிகளில் தாக்குதல் நடக்கும்போது பொதுமக்கள் கொல்லப்படுவது அதிகரித்து வருகிறது. பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் மக்கள் மீது குறிவைத்தும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில் ஜம்மு-காஷ்மீர் எல்லையில்  இந்த ஆண்டில் மட்டும் 28 பொதுமக்கள் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக ஜம்மு-காஷ்மீர் காவல் துறை தலைவர் விஜய் குமார் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக பேசிய அவர், பயங்கரவாதிகளின் தாக்குதலால் கடந்த 5 நாள்களில் 7 பேர் உயிரிழந்தனர். 2021-ல் மட்டும் இதுவரை 28 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 5 பேர் ஹிந்து மதத்தைச் சேர்ந்தவர்கள். இருவர் வெளிமாநிலத்தைச் சேர்ந்த ஹிந்து தொழிலாளர்கள் எனக் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.