விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

உத்தரப் பிரதேசம்: பேருந்து விபத்தில் 13 பேர் பலி , 30 பேர் காயம்

உத்தரப் பிரதேசம் மாநிலம் பரபங்கியில் லாரியும் பேருந்தும் மோதிக் கொண்டதில் 13 பேர் பலியாகியிருக்கிறார்கள்.

News image
உத்தரப் பிரதேசம்: பேருந்து விபத்தில் 13 பேர் பலி , 30 பேர் காயம்
Updated On :7 அக்டோபர் 2021, 5:37 am

DIN

உத்தரப் பிரதேசம் மாநிலம் பரபங்கியில் லாரியும் பேருந்தும் மோதிக் கொண்டதில் 13 பேர் பலியாகியிருக்கிறார்கள்.

உத்தரப் பிரதேசத்தில் உள்ள பரபங்கியில் இன்று (அக்-7)வியாழக்கிழமை காலை பேருந்தும் லாரியும் நேரடியாக மோதிக்கொண்டது. இதில் பேருந்தில் பயணித்தவர்களில் 13 பேர் பலியானதோடு 30 பேர் காயமடைந்தனர்.

பின் விபத்து நடந்த பகுதிக்கு விரைந்த அம்மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் யமுனா பிரசாத் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது எனத் தெரிவித்தார்.

விபத்தை நேரில் பார்த்த ஒருவர் . ‘ லாரியும் பேருந்தும் எதிரெதிர் திசையில் வந்து கொண்டிருந்தது. திடீரென குறுக்கே மாடு வந்ததால் அதைக் காப்பாற்றுவதற்காக ஓட்டுனர் வண்டியைத் திருப்பியதும் விபத்து ஏற்பட்டது’ எனத் தெரிவித்திருக்கிறார்.

மேலும் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் , விபத்தில் இறந்தவர்களுக்கு தன் இரங்கலைப் பதிவு செய்ததோடு பலியானவர்களின் உறவினர்களுக்கு ரூ.2 லட்சமும் , காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 இழப்பீடு வழங்க உத்தரவு பிறப்பித்திருக்கிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.