மும்பை துறைமுகத்தில் ரூ. 125 கோடி மதிப்பிலான 25 கிலோ போதைப் பொருளை வருவாய் புலனாய்வு பிரிவினர் புதன்கிழமை பறிமுதல் செய்துள்ளனர்.
மும்பை நிவா ஷேவா துறைமுகத்தில் கண்டெய்னர் ஒன்றிலிருந்து 25 கிலோ ஹெராயின் வகை போதைப் பொருளை வருவாய் புலனாய்வு பிரிவினர் பறிமுதல் செய்துள்ளனர். இதன் மதிப்பு ரூ. 125 கோடி எனத் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த போதைப் பொருள் கடத்தலுக்கு சம்பந்தப்பட்ட தொழிலதிபர் ஒருவரை கைது செய்துள்ள புலனாய்வு பிரிவினர் அக்டோபர் 11 வரை காவலில் எடுத்துள்ளனர்.
முன்னதாக, மும்பை சொகுசுக் கப்பலில் போதைப் பொருள் விருந்தில் பங்கேற்ற நடிகர் ஷாருக்கானின் மகன் ஆரியன் கான் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.