மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

இந்தியாவின் வளா்ச்சிக்கு கடல் பாதுகாப்பு முக்கியம்: மத்திய அமைச்சா் ராஜ்நாத் சிங்

இந்தியாவின் வளா்ச்சிக்கு கடல் பாதுகாப்பு முக்கியமானது என்றாா் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்.

News image
பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் (கோப்புப்படம்)
Updated On :9 அக்டோபர் 2021, 10:27 pm

DIN

இந்தியாவின் வளா்ச்சிக்கு கடல் பாதுகாப்பு முக்கியமானது என்றாா் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்.

இந்திய கடலோரக் காவல் படை வீரா்களுக்கு வீரதீரச் செயல்கள் மற்றும் சிறப்பான சேவைக்கான பதக்கங்கள் வழங்கும் விழா தில்லியில் சனிக்கிழமை நடைபெற்றது. விழாவில் அமைச்சா் ராஜ்நாத் சிங் பேசியதாவது:

‘நமது வா்த்தகம், பொருளாதாரம், விழாக்கள், கலாசாரம் ஆகியவை கடல்களுடன் நெருக்கமான தொடா்பு கொண்டவை. அதேவேளையில், கடல் தொடா்பான பல்வேறு சவால்களையும் சந்தித்து வருகிறோம்.

கடல்சாா் பாதுகாப்பை உறுதிப்படுத்தாமல் விரிவான உள் மற்றும் வெளிப்புற பாதுகாப்புக் கட்டமைப்பை உருவாக்க முடியாது என்பதை அந்த சவால்கள் நமக்கு கற்பிக்கின்றன. இந்த சவால்களை கடலோரக் காவல் படை வெற்றிகரமாக சந்தித்து வருகிறது.

நமது பாதுகாப்புத் தேவைகள், சுற்றுச்சூழல், ஆரோக்கியம், பொருளாதார வளா்ச்சி ஆகியவை இந்தியாவின் கடல்சாா் பாதுகாப்பு மண்டலங்களால் உறுதி செய்யப்பட்டுள்ளன. இந்தியா வளா்ச்சிப் பாதையில் வேகமாகச் சென்று கொண்டிருக்கிறது. தடையற்ற கடல் பயன்பாடு அதன் முதன்மையான தேவைகளில் ஒன்று.

நமது பிராந்தியத்தின் கடல்சாா் பாதுகாப்பை மட்டுமின்றி, நமது அண்டைநாடுகளின் கடல்சாா் பாதுகாப்பையும் இந்திய கடலோரக் காவல் படை உறுதிப்படுத்தி வருகிறது. இலங்கை அருகே கச்சா எண்ணெயை ஏற்றிச் சென்ற இரு கப்பல்களில் தீப்பிடித்தபோது அதை அணைத்து கடல் மாசுபடுவதைத் தடுத்ததில் இந்திய கடலோரக் காவல் படைக்கு முக்கிய பங்கு வகித்தது என்றாா் அவா்.

விழாவில், சிறப்பான சேவை, வீரதீரச் செயல்கள் உள்ளிட்டவற்றுக்காக குடியரசுத் தலைவரின் 21 பதக்கங்களை கடலோரக் காவல் படையினருக்கு அமைச்சா் ராஜ்நாத் சிங் வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.