தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

ஆந்திரம்: ரூ.5 கோடி மதிப்பிலான ரூபாய் தாள்களால் அலங்கரிக்கப்பட்ட ஆலயம்

ஆந்திரத்தின் நெல்லூர் மாவட்டத்தில் தசரா விழாவிற்காக ரூ.5 கோடி மதிப்பிலான ரூபாய் தாள்களால் கோயிலை அலங்கரித்திருக்கிறார்கள்.

News image
ஆந்திரம்: ரூ.5 கோடி மதிப்பிலான ரூபாய் தாள்களால் அலங்கரிக்கப்பட்ட ஆலயம்
Updated On :13 அக்டோபர் 2021, 7:16 am

DIN

ஆந்திரத்தின் நெல்லூர் மாவட்டத்தில் தசரா விழாவிற்காக ரூ.5 கோடி மதிப்பிலான ரூபாய் தாள்களால் தெய்வங்களை அலங்கரித்திருக்கிறார்கள்.

நெல்லூர் மாவட்டத்தைச் சேர்ந்த வாசவி கன்யகா பரமேஸ்வரி ஆலயத்தில் 100-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் இணைந்து ரூ.2000,500,200,100,50 மற்றும் 10 ரூபாய் தாள்களை ஓரிகாமி மலர்களாகவும் பூச்செண்டுகளாகவும் தயாரித்து பல்வேறு தெய்வங்களை அலங்கரித்து வைத்திருக்கிறார்கள்.

நவராத்திரி அன்று செல்வத்தின் தெய்வமான தனலட்சுமியை பக்தர்கள் அதிகம் வழிபடுவதால் இந்த ரூபாய் அலங்காரம் செய்யப்படுகிறது. இதன் மொத்த மதிப்பு 5.16 கோடி எனத் தெரிவித்திருக்கிறார்கள்.

இதுகுறித்து நெல்லூர் மாவட்ட நகர்புற வளர்ச்சித் தலைவரும் கோயில் நிர்வாகியுமான முக்காலா துவராகாநாத் ‘ரூ.11 கோடி செலவில் நான்கு ஆண்டுகளுக்கு முன் இக்கோயிலின் புனரமைப்பு வேலைகள் முடிந்த பின் நடக்கும் விழா என்பதால் ரூபாய் தாள்களைக் கொண்டு அலங்காரம் செய்ய முடிவு செய்தோம். முன்னதாக 7 கிலோ தங்கமும் 60 கிலோ வெள்ளியும் பயன்படுத்தும் திட்டம் இருந்தது இருப்பினும் நிதிப்பற்றாக்குறையால் அதைச் செய்யமுடியவில்லை ‘ எனத் தெரிவித்தார்.

மேலும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே தெலுங்கானாவின் ஜோகுலாம்பா ஜாத்வா மாவட்டத்தில் உள்ள கன்யகா பரமேஸ்வரி ஆலயத்தில் ரூ.1,11,11,111 மதிப்பிலான ரூபாய் தாள்களால் தெய்வங்கள் அலங்கரிக்கப்பட்டதும் 2017-ஆம் ஆண்டில் இதே கோயிலில் ரூ.3,33,33,333 தாள்கள் அலங்கரிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.